இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் | தமிழில் ரீமேக் ஆகும் ஸ்ரீ லீலாவின் 'கிஸ்' | ராஜமவுலி இயக்கத்தில் மூன்று பாகங்களாக 'மகாபாரதம்' | படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைக்க மறுப்பு : பெப்சி மீது தயாரிப்பாளர் சங்கம் வழக்கு | பிளாஷ்பேக்: இரண்டு ஆக்சன் ஹீரோக்கள் மோதிய 'நல்ல நாள்' | பிளாஷ்பேக் : ஆண்டாள் பெருமையை உலகிற்கு சொன்ன படம் | புஷ்பா 2, தியேட்டர் நெரிசல் : குணடைந்த சிறுவன் | நான் இன்னும் மிடில் கிளாஸ் தான்... என் சாதனைக்கு உரியவர் ஷாலினி : அஜித் பேட்டி | டெஸ்ட்டில் விட்டதை கேசரி சாப்டர் 2-வில் பிடிப்பாரா மாதவன் | 300 தியேட்டர்களில் வெளியாகும் டூரிஸ்ட் பேமிலி |
கமல்ஹாசன் குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் சுஹாசினி. 1980 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் . தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார்.
சுஹாசினிக்கு சிறு வயதில் இருந்தே காச நோய் பாதிப்பு இருக்கிறது. இந்த தகவலை இப்போது வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
எனக்கு ஆறு வயதிலேயே காசநோய் பிரச்னை இருந்தது. அதற்கு சிகிச்சை எடுத்தேன். பிறகு குறைந்துவிட்டது. எல்லாம் சரியாகி விட்டது என்று இருந்தேன். ஆனால் 36 வயதில் மீண்டும் அந்த வியாதி வந்து விட்டது. இதன் காரணமாக எனக்கு திடீரென்று எடை கூடி விட்டது. அதுமட்டுமன்றி கேட்கும் திறனிலும் பிரச்சினை ஆரம்பித்து விட்டது. மீண்டும் சிகிச்சை எடுத்துக் கொண்டேன்.
சிகிச்சைக்கு பிறகு மெல்ல மெல்ல காச நோய் பாதிப்பு குறைந்து குணமாகி விட்டேன். இதை அப்போது யாருக்கும் தெரியாமல் மறைத்து விட்டேன். வெளியே சொல்வதை கவுரவக் குறைவாகவும் நினைத்தேன். ஆறு மாதங்கள் ரகசியமாகவே சிகிச்சை எடுத்துக் கொண்டேன். அதை இப்போது சமூகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே வெளியே சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.