ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

கமல்ஹாசன் குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் சுஹாசினி. 1980 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் . தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார்.
சுஹாசினிக்கு சிறு வயதில் இருந்தே காச நோய் பாதிப்பு இருக்கிறது. இந்த தகவலை இப்போது வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
எனக்கு ஆறு வயதிலேயே காசநோய் பிரச்னை இருந்தது. அதற்கு சிகிச்சை எடுத்தேன். பிறகு குறைந்துவிட்டது. எல்லாம் சரியாகி விட்டது என்று இருந்தேன். ஆனால் 36 வயதில் மீண்டும் அந்த வியாதி வந்து விட்டது. இதன் காரணமாக எனக்கு திடீரென்று எடை கூடி விட்டது. அதுமட்டுமன்றி கேட்கும் திறனிலும் பிரச்சினை ஆரம்பித்து விட்டது. மீண்டும் சிகிச்சை எடுத்துக் கொண்டேன்.
சிகிச்சைக்கு பிறகு மெல்ல மெல்ல காச நோய் பாதிப்பு குறைந்து குணமாகி விட்டேன். இதை அப்போது யாருக்கும் தெரியாமல் மறைத்து விட்டேன். வெளியே சொல்வதை கவுரவக் குறைவாகவும் நினைத்தேன். ஆறு மாதங்கள் ரகசியமாகவே சிகிச்சை எடுத்துக் கொண்டேன். அதை இப்போது சமூகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே வெளியே சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.




