நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

அந்த காலத்தில் ஆண்களே பெரும்பாலும் கதை நாயகர்களாக நடித்தார்கள். பெண்கள் கதையின் நாயகியாக அதாவது சோலோ ஹீரோயினாக நடிப்பது அபூர்வம். அப்படி நடித்தாலும் அது புராண கதாபாத்திரமாக இருக்கும். இப்படியான ஒரு காலகட்டத்தில் வி.என்.ஜானகி 'தியாகி' என்ற படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்தார். அதுவும் தாழ்த்தப்பட்ட பெண்ணாக. ராம்ஜிபாய் ஆர்யா இயக்கினார்.
ஜானகியுடன் என். கிருஷ்ணமூர்த்தி, வி.எஸ். மணி, 'ஸ்டண்ட்' சோமு, கே.தேவநாராயணன், கே.எஸ்.அங்கமுத்து, தோடி கண்ணன், கோலத்து மணி, டி.வி. சேதுராமன், சி.கே.நாகரத்னம், வி.சரோஜா ஆகியோர் நடித்தனர். பாபநாசம் சிவன் இசை அமைத்திருந்தார்.
உயர்ஜாதி வகுப்பினர் பெரும்பான்மையாக வாழும் அந்த ஊரில் ஒதுக்குபுறமாக தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் ஊருக்குள் செருப்பு அணிந்து வரவோ, கோவிலுக்குள் நுழையவோ, பொது கிணற்றில் தண்ணீர் எடுக்கவோ அனுமதியில்லை. இந்த நிலையில் அந்த ஊரை சேர்ந்த உயர்ஜாதி வகுப்பை சேர்ந்த இளைஞன் வெளிநாட்டில் படித்து விட்டு ஊர் திரும்புகிறான். அவனுக்கு தாழ்த்தப்பட்ட ஜாதி பெண்ணான ஜானகி மீது காதல் வருகிறது.
ஆனால் ஜானகி எங்கள் மக்களும் கோவிலுக்குள் செல்ல எப்போது அனுமதி கிடைக்கிறதோ அப்போது நாம் காதலிக்கலாம் என்று கூறி இருவரும் ஆலய நுழைவு போராட்டம் நடத்துவதுதான் படத்தின் கதை. ஆனால் படம் அப்போது சுமாரான வரவேற்பையே பெற்றது.