நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

அந்த காலத்தில் ஆண்களே பெரும்பாலும் கதை நாயகர்களாக நடித்தார்கள். பெண்கள் கதையின் நாயகியாக அதாவது சோலோ ஹீரோயினாக நடிப்பது அபூர்வம். அப்படி நடித்தாலும் அது புராண கதாபாத்திரமாக இருக்கும். இப்படியான ஒரு காலகட்டத்தில் வி.என்.ஜானகி 'தியாகி' என்ற படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்தார். அதுவும் தாழ்த்தப்பட்ட பெண்ணாக. ராம்ஜிபாய் ஆர்யா இயக்கினார்.
ஜானகியுடன் என். கிருஷ்ணமூர்த்தி, வி.எஸ். மணி, 'ஸ்டண்ட்' சோமு, கே.தேவநாராயணன், கே.எஸ்.அங்கமுத்து, தோடி கண்ணன், கோலத்து மணி, டி.வி. சேதுராமன், சி.கே.நாகரத்னம், வி.சரோஜா ஆகியோர் நடித்தனர். பாபநாசம் சிவன் இசை அமைத்திருந்தார்.
உயர்ஜாதி வகுப்பினர் பெரும்பான்மையாக வாழும் அந்த ஊரில் ஒதுக்குபுறமாக தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் ஊருக்குள் செருப்பு அணிந்து வரவோ, கோவிலுக்குள் நுழையவோ, பொது கிணற்றில் தண்ணீர் எடுக்கவோ அனுமதியில்லை. இந்த நிலையில் அந்த ஊரை சேர்ந்த உயர்ஜாதி வகுப்பை சேர்ந்த இளைஞன் வெளிநாட்டில் படித்து விட்டு ஊர் திரும்புகிறான். அவனுக்கு தாழ்த்தப்பட்ட ஜாதி பெண்ணான ஜானகி மீது காதல் வருகிறது.
ஆனால் ஜானகி எங்கள் மக்களும் கோவிலுக்குள் செல்ல எப்போது அனுமதி கிடைக்கிறதோ அப்போது நாம் காதலிக்கலாம் என்று கூறி இருவரும் ஆலய நுழைவு போராட்டம் நடத்துவதுதான் படத்தின் கதை. ஆனால் படம் அப்போது சுமாரான வரவேற்பையே பெற்றது.