அழகுக்காக அறுவை சிகிச்சையா : ரகுல் ப்ரீத் சிங் பதில் | ''அவுரங்கசீப்புக்கு 2 அறை கொடுக்க வேண்டும்'' ; சூர்யா பட விழாவில் விஜய் தேவரகொண்டா காட்டம் | 'ஜன கன மன' 2ம் பாகம் இருக்கிறது ; உறுதிப்படுத்திய இயக்குனர் | பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி என்.காருண் மரணம் ; கேன்ஸ் விருது பெற்றவர் | 'பேமிலிமேன்-3' வெப்சீரிஸ் நடிகர் நீர்வீழ்ச்சியில் விழுந்து மரணம் | போதை மீட்பு மையத்திற்கு அனுப்பப்படும் வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ | ஜூலையில் திரைக்கு வரும் அனுஷ்காவின் காட்டி படம் | மகாராஜா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது | பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆர் படம்: அடுத்தாண்டு ஜூன் 25ல் ரிலீஸ் | டிடி நெக்ஸ்ட் லெவல் டிரைலர் எப்போது? |
அந்த காலத்தில் ஆண்களே பெரும்பாலும் கதை நாயகர்களாக நடித்தார்கள். பெண்கள் கதையின் நாயகியாக அதாவது சோலோ ஹீரோயினாக நடிப்பது அபூர்வம். அப்படி நடித்தாலும் அது புராண கதாபாத்திரமாக இருக்கும். இப்படியான ஒரு காலகட்டத்தில் வி.என்.ஜானகி 'தியாகி' என்ற படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்தார். அதுவும் தாழ்த்தப்பட்ட பெண்ணாக. ராம்ஜிபாய் ஆர்யா இயக்கினார்.
ஜானகியுடன் என். கிருஷ்ணமூர்த்தி, வி.எஸ். மணி, 'ஸ்டண்ட்' சோமு, கே.தேவநாராயணன், கே.எஸ்.அங்கமுத்து, தோடி கண்ணன், கோலத்து மணி, டி.வி. சேதுராமன், சி.கே.நாகரத்னம், வி.சரோஜா ஆகியோர் நடித்தனர். பாபநாசம் சிவன் இசை அமைத்திருந்தார்.
உயர்ஜாதி வகுப்பினர் பெரும்பான்மையாக வாழும் அந்த ஊரில் ஒதுக்குபுறமாக தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் ஊருக்குள் செருப்பு அணிந்து வரவோ, கோவிலுக்குள் நுழையவோ, பொது கிணற்றில் தண்ணீர் எடுக்கவோ அனுமதியில்லை. இந்த நிலையில் அந்த ஊரை சேர்ந்த உயர்ஜாதி வகுப்பை சேர்ந்த இளைஞன் வெளிநாட்டில் படித்து விட்டு ஊர் திரும்புகிறான். அவனுக்கு தாழ்த்தப்பட்ட ஜாதி பெண்ணான ஜானகி மீது காதல் வருகிறது.
ஆனால் ஜானகி எங்கள் மக்களும் கோவிலுக்குள் செல்ல எப்போது அனுமதி கிடைக்கிறதோ அப்போது நாம் காதலிக்கலாம் என்று கூறி இருவரும் ஆலய நுழைவு போராட்டம் நடத்துவதுதான் படத்தின் கதை. ஆனால் படம் அப்போது சுமாரான வரவேற்பையே பெற்றது.