பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் | இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' |

சிம்பொனி இசை அரங்கேற்றி சாதித்த இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு ஜுன் 2ல் அவரின் பிறந்தநாளில் அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
1500 படங்களுக்கு மேல் இசையமைத்தவர் இசையமைப்பாளர் இளையராஜா. சமீபத்தில் லண்டனில் உள்ள அப்போலோ அரங்கத்தில் சிம்பொனி இசையை அரங்கேற்றி அசத்தினார். இதற்கு பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
முன்னதாக இளையராஜாவை நேரில் சென்று வாழ்த்தி இருந்த முதல்வர் ஸ்டாலின், ‛‛இளையராஜாவின் சிம்பொனி இசை சாதனை, அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணம் ஆகியவற்றுக்காக அரசின் சார்பில் விழா நடத்தப்படும்'' என அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் ஜுன் 2ம் தேதி, இளையராஜாவின் பிறந்தநாள். அந்த நாளிலேயே அவருக்கு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் இன்று(மார்ச் 27) அறிவித்தார்.