தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

பின்னணிப் பாடகர் திப்பு, பாடகி ஹரிணி ஆகியோரின் மகன் சாய் அபயங்கர். 'கட்சி சேரா' என்ற ஆல்பத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அவரது அடுத்த ஆல்பமான 'ஆச கூட' என்ற ஆல்பமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அந்தப் பிரபலமும், வரவேற்பும் அவரை அப்படியே சினிமாவுக்குள் இழுத்து வந்துவிட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், பாக்யராஜ் கண்ணன் இயக்கும் 'பென்ஸ்' படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அடுத்து சூர்யாவின் 45வது படத்திற்கும் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆனார்.
இப்போது பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் நான்காவது படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிம்பு நடிக்க உள்ள 49வது மற்றும் 51வது படங்களுக்கும் இவர்தான இசையமைப்பாளராக முடிவு செய்யப்பட்டுள்ளார் என்பதும் தகவல். அடுத்து அட்லி-அல்லு அர்ஜுன் இணைய உள்ள பிரம்மாண்ட படத்திற்கும் இவரையே இசையமைப்பாளராக நியமிக்கப் பேசி வருகிறார்களாம்.
ஒரு படம் வெளிவருவதற்கு முன்னரே தொடர்ந்து சில படங்களுக்கு சாய் அபயங்கர் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்படுவது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.




