பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

பின்னணிப் பாடகர் திப்பு, பாடகி ஹரிணி ஆகியோரின் மகன் சாய் அபயங்கர். 'கட்சி சேரா' என்ற ஆல்பத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அவரது அடுத்த ஆல்பமான 'ஆச கூட' என்ற ஆல்பமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அந்தப் பிரபலமும், வரவேற்பும் அவரை அப்படியே சினிமாவுக்குள் இழுத்து வந்துவிட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், பாக்யராஜ் கண்ணன் இயக்கும் 'பென்ஸ்' படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அடுத்து சூர்யாவின் 45வது படத்திற்கும் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆனார்.
இப்போது பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் நான்காவது படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிம்பு நடிக்க உள்ள 49வது மற்றும் 51வது படங்களுக்கும் இவர்தான இசையமைப்பாளராக முடிவு செய்யப்பட்டுள்ளார் என்பதும் தகவல். அடுத்து அட்லி-அல்லு அர்ஜுன் இணைய உள்ள பிரம்மாண்ட படத்திற்கும் இவரையே இசையமைப்பாளராக நியமிக்கப் பேசி வருகிறார்களாம்.
ஒரு படம் வெளிவருவதற்கு முன்னரே தொடர்ந்து சில படங்களுக்கு சாய் அபயங்கர் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்படுவது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.