ஜனநாயகன்: வழக்கு போடாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'ரவுடி பேபி' லிரிக் வீடியோ | விபீஷணனாக நடிக்கவில்லை ; விஜய்சேதுபதி திட்டவட்டம் | மோகன்லால் மம்முட்டிக்கு நான் வில்லன் தான் ; உறுதி செய்த பஹத் பாசில் | பிப்ரவரி 26ல் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம்? | அப்படி ஒன்றும் அவசியம் இல்லை ; ஓடிடி நிறுவனத்தை அதிர வைத்த 'சூ ப்ரம் சோ' தயாரிப்பாளர் | ஜனநாயகன் பட வழக்கை வாபஸ் பெற்றது தயாரிப்பு நிறுவனம் | டொவினோ தாமஸ் படத்தில் இணைந்த 'சர்வம் மாயா' நாயகி | பிளாஷ்பேக் ; ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பை மனதில் வைத்து பாக்யராஜ் புத்திசாலித்தனமாக செய்த காரியம் | 'பேட்ரியாட்' டப்பிங்கை நிறைவு செய்த மோகன்லால் |

விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் எஸ்யு அருண்குமார் இயக்கியுள்ள படம் 'வீர தீர சூரன் 2'. ஜிவி பிரகாஷ் இசையமைக்க, ரியா ஷிபு தயாரித்துள்ளார். இந்த படம் இன்று(மார்ச் 27) ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படம் காலையில் வெளியாகவில்லை.
இப்படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்ற பி4யு என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் கடைசி நேரத்தில் டில்லி உயர்நீதிமன்றத்தில் பெற்ற தடைதான் இதற்குக் காரணம். இப்படத்தில் முதலீடு செய்திருந்த அந்த நிறுவனம் ஓடிடி உரிமையை தன் வசம் வைத்துள்ளது. ஓடிடி விற்பனை நடைபெறுவதற்கு முன்பே வெளியீட்டுத் தேதியை அறிவித்துவிட்டதால் தங்களால் ஓடிடி உரிமையை விற்க முடியவில்லை, அதற்கான நஷ்ட ஈட்டைத் தயாரிப்பாளர் தர வேண்டும் என அந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதனால் இந்த படத்தை இன்று காலை வரை வெளியிட டில்லி நீதிமன்றம் நேற்று தடை விதித்தது.
இது குறித்து நேற்று இரவு வரை தயாரிப்பாளர் சங்கம் தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. காலையில் தடையை விலக்கும் விதத்தில் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விக்ரமும் படத்தை வெளியிட முயற்சிகள் எடுத்து வந்தார். இதனால் படம் இன்று காலை 11 மணிக்கு மேல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. தொடர்ந்து படத்தின் வழக்கு இன்றும் நடந்தது. அப்போது படத்தை வெளியிட மேலும் 4 வாரங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அதேசமயம் இந்த படத்தை வெளியிட வேண்டி சமரச பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது. இந்நிலையில் இப்பிரச்னை தொடர்பாக இருதரப்பினரும் பேசி சுமூக முடிவை எடுத்துள்ளனர். அதை நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இப்படத்திற்காக விதிக்கப்பட்ட 4 வாரங்கள் தடையை நீதிமன்றம் நீக்கியது. இதனால் வீர தீர சூரன் படம் மாலை முதல் தியேட்டர்களில் வெளியாகும் என தெரிகிறது.
மாலை முதல் படம் ரிலீஸ்
முன்னதாக இப்பிரச்னை தொடர்பாக தியேட்டர் உரிமையாளர் திருப்பூர் சுப்ரமணியம் வெளியிட்ட ஆடியோ பதிவில், ‛‛வீர தீர சூரன் படம் தொடர்பாக தியேட்டர் உரிமையாளர்களும், விநியோக உரிமையாளர்களும் பேசினர். அநேகமாக மாலை 4 மணிக்குள் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என சொல்லப்படுகிறது. மாலை 6 மணி காட்சி வெளியாக அதிக வாய்ப்புள்ளது'' என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.




