நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியாகும் படம் 'வீர தீர சூரன் 2'. ஆனால், பி4யு என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் கடைசி நேரத்தில் தொடர்ந்த வழக்கு காரணமாக இன்று காலை 10.30 மணி வரை படத்தை வெளியிட டில்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சாட்டிலைட், ஓடிடி உரிமை குறித்த சிக்கல்தான் இதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. இதில் சாட்டிலைட் உரிமைக்கான ஏழு கோடி ரூபாய் தொகையை விக்ரமின் சம்பள பாக்கிக்காகத் தந்து விடுகிறேன் என தயாரிப்பாளர் கூறியிருந்தாராம். இதைப் பற்றி கேள்விப்பட்டுத்தான் பி4யு நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது.
வழக்கு மூலமாக படத்திற்குத் தடை என்று வந்ததும், விக்ரம் அந்த ஏழு கோடி ரூபாய் தொகையை தற்போது விட்டுக் கொடுத்துள்ளாராம். இது நேற்றைய பேச்சுவார்த்தையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கை வாபஸ் பெற பி4யு நிறுவனம் முடிவு செய்துள்ளது என்கிறார்கள். அதனால், காலை 11 மணிக்கு மேல் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.