காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியாகும் படம் 'வீர தீர சூரன் 2'. ஆனால், பி4யு என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் கடைசி நேரத்தில் தொடர்ந்த வழக்கு காரணமாக இன்று காலை 10.30 மணி வரை படத்தை வெளியிட டில்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சாட்டிலைட், ஓடிடி உரிமை குறித்த சிக்கல்தான் இதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. இதில் சாட்டிலைட் உரிமைக்கான ஏழு கோடி ரூபாய் தொகையை விக்ரமின் சம்பள பாக்கிக்காகத் தந்து விடுகிறேன் என தயாரிப்பாளர் கூறியிருந்தாராம். இதைப் பற்றி கேள்விப்பட்டுத்தான் பி4யு நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது.
வழக்கு மூலமாக படத்திற்குத் தடை என்று வந்ததும், விக்ரம் அந்த ஏழு கோடி ரூபாய் தொகையை தற்போது விட்டுக் கொடுத்துள்ளாராம். இது நேற்றைய பேச்சுவார்த்தையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கை வாபஸ் பெற பி4யு நிறுவனம் முடிவு செய்துள்ளது என்கிறார்கள். அதனால், காலை 11 மணிக்கு மேல் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.