அழகுக்காக அறுவை சிகிச்சையா : ரகுல் ப்ரீத் சிங் பதில் | ''அவுரங்கசீப்புக்கு 2 அறை கொடுக்க வேண்டும்'' ; சூர்யா பட விழாவில் விஜய் தேவரகொண்டா காட்டம் | 'ஜன கன மன' 2ம் பாகம் இருக்கிறது ; உறுதிப்படுத்திய இயக்குனர் | பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி என்.காருண் மரணம் ; கேன்ஸ் விருது பெற்றவர் | 'பேமிலிமேன்-3' வெப்சீரிஸ் நடிகர் நீர்வீழ்ச்சியில் விழுந்து மரணம் | போதை மீட்பு மையத்திற்கு அனுப்பப்படும் வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ | ஜூலையில் திரைக்கு வரும் அனுஷ்காவின் காட்டி படம் | மகாராஜா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது | பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆர் படம்: அடுத்தாண்டு ஜூன் 25ல் ரிலீஸ் | டிடி நெக்ஸ்ட் லெவல் டிரைலர் எப்போது? |
விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியாகும் படம் 'வீர தீர சூரன் 2'. ஆனால், பி4யு என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் கடைசி நேரத்தில் தொடர்ந்த வழக்கு காரணமாக இன்று காலை 10.30 மணி வரை படத்தை வெளியிட டில்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சாட்டிலைட், ஓடிடி உரிமை குறித்த சிக்கல்தான் இதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. இதில் சாட்டிலைட் உரிமைக்கான ஏழு கோடி ரூபாய் தொகையை விக்ரமின் சம்பள பாக்கிக்காகத் தந்து விடுகிறேன் என தயாரிப்பாளர் கூறியிருந்தாராம். இதைப் பற்றி கேள்விப்பட்டுத்தான் பி4யு நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது.
வழக்கு மூலமாக படத்திற்குத் தடை என்று வந்ததும், விக்ரம் அந்த ஏழு கோடி ரூபாய் தொகையை தற்போது விட்டுக் கொடுத்துள்ளாராம். இது நேற்றைய பேச்சுவார்த்தையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கை வாபஸ் பெற பி4யு நிறுவனம் முடிவு செய்துள்ளது என்கிறார்கள். அதனால், காலை 11 மணிக்கு மேல் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.