சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியாகும் படம் 'வீர தீர சூரன் 2'. ஆனால், பி4யு என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் கடைசி நேரத்தில் தொடர்ந்த வழக்கு காரணமாக இன்று காலை 10.30 மணி வரை படத்தை வெளியிட டில்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சாட்டிலைட், ஓடிடி உரிமை குறித்த சிக்கல்தான் இதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. இதில் சாட்டிலைட் உரிமைக்கான ஏழு கோடி ரூபாய் தொகையை விக்ரமின் சம்பள பாக்கிக்காகத் தந்து விடுகிறேன் என தயாரிப்பாளர் கூறியிருந்தாராம். இதைப் பற்றி கேள்விப்பட்டுத்தான் பி4யு நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது.
வழக்கு மூலமாக படத்திற்குத் தடை என்று வந்ததும், விக்ரம் அந்த ஏழு கோடி ரூபாய் தொகையை தற்போது விட்டுக் கொடுத்துள்ளாராம். இது நேற்றைய பேச்சுவார்த்தையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கை வாபஸ் பெற பி4யு நிறுவனம் முடிவு செய்துள்ளது என்கிறார்கள். அதனால், காலை 11 மணிக்கு மேல் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.