9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரித்விராஜ் படத்தை இயக்கும் ஜீத்து ஜோசப் | கேரள கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகசைதன்யா | துல்கர் சல்மான் படம் மூலம் மீண்டும் டைரக்சனுக்கு திரும்பும் மின்னல் முரளி ஒளிப்பதிவாளர் | பிளாஷ்பேக் : மூன்றாம் பிறை படத்திற்காக ஸ்ரீதேவிக்கு தேசிய விருது கிடைக்காதது ஏன்? | பிளாஷ்பேக் : ஒரே பிரேமில் 5 சின்னப்பா : 80 வருடங்களுக்கு முன்பே தொழில்நுட்ப சாதனை | எப்படி இருந்த ஷிவானி இப்படி ஆகிட்டாங்களே | ரஞ்சனி சீரியலில் பவித்ரா ஜனனி என்ட்ரியா? | மெளன ராகம் ஜோடி இப்போது ரியல் ஜோடி ஆகிறார்கள் | சினிமாவில் பட்ட அவமானம் : மனம் திறக்கும் மூசா அபிலாஷ் | சந்தியாராகம் தொடரில் மாற்றப்பட்ட ஹீரோ |
மோகன்லால் நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் 'விருஷபா'. நந்த கிஷோர் எழுத்து இயக்கத்தில் தயாராகிறது. கனெக்ட் மீடியா மற்றும் பாலாஜி டெலி பிலிம்ஸ் ஏவிஎஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. மோகன்லாலுடன் ஷான்யா கபூர், ஷாரா கான், ரோஷன் மேகா, ராகினி திவேதி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஒரு மலையாள படத்தில் இத்தனை பாலிவுட் நடிகர்கள் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை.
பாலிவுட் தயாரிப்பாளர்கள் ஷோபா கபூர், ஏக்தா கபூர், பத்ம குமார், வருண் மாத்தூர், சௌரப் மிஸ்ரா, அபிஷேக் வியாஸ், விஷால் குர்னானி மற்றும் ஜூஹி பரேக் மேத்தா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் 'விருஷபா' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றது. மும்பையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இதனை மோகன்லாலுடன் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரடக்ஷன் பணிகள் துவங்கியுள்ளது. தெலுங்கு, மலையாளத்தில் நேரடியாக தயாராகும் படம், ஹிந்தி, தமிழ், கன்னட மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படுகிறது. வரும் தீபாவளி அன்று படம் வெளியிடப்பட இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.