ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை |
ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீதியாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் மை ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் 'அக்யூஸ்ட்'. இப்படத்தை கன்னட இயக்குனர் பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்குகிறார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடிக்கிறார். உதயா நாயகனாக நடிக்கிறார்.
முன்பெல்லாம் சென்னை சென்ட்ரலில் இருந்த மத்திய சிறையில் அடிக்கடி படப்பிடிப்பு நடக்கும். தற்போது அந்த சிறை இடிக்கப்பட்டுவிட்டதால் பெரும்பாலும் சிறைச்சாலை செட் அமைத்தே படமாக்கி வருகிறார்கள். புழல் சிறையில் பாதுகாப்பு கருதி சினிமா படப்பிடிப்புக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் அங்கு படப்பிடிப்பு நடத்துவதில் சிரமம் இருப்பதால் யாரும் செல்வதில்லை.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு புழல் மத்திய சிறையில் உரிய அனுமதி பெற்று 'அக்யூஸ்ட்' படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. உதயா மற்றும் அஜ்மல், யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் இதில் பங்கேற்றனர். கடந்த மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது. தற்போது சென்னைக்கு அருகே உள்ள குத்தம்பாக்கம் பகுதியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே குற்றவாளிகள் அல்ல, சிஸ்டத்தில் ஏற்படும் பிழைகளால் நல்லவர்கள் கூட எப்படி பாதிப்படைகிறார்கள், தாதாவக உருவாகிறார்கள் என்பதை சொல்லும் படமாக உருவாகி வருகிறது. படத்திற்கு மருதநாயகம் ஒளிப்பதிவு செய்கிறார். நரேன் பாலகுமார் இசை அமைக்கிறார்.