'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சின்னத்திரை நடிகையான திவ்யா ஸ்ரீதர் தற்போது 'செவ்வந்தி' தொடரில் நடித்து வருகிறார். இவரது கணவர் அர்னவ் இவருக்கு துரோகம் செய்துவிட்டு அன்ஷிதா என்ற சக நடிகையுடன் சுற்றி வருவதாக திவ்யா ஸ்ரீதர் புகார் செய்திருந்தார். இந்த பிரச்னை அப்படியே இருக்க அர்னவ் அன்ஷிதாவுடன் ஜோடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று, பின் கடந்த வாரத்தில் எவிக்ட் ஆகி வெளியேறியிருந்தார். இதனையடுத்து திவ்யா ஸ்ரீதர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து சில தினங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் லைவ் வந்த திவ்யா ஸ்ரீதர், 'சிலர் அர்னவ்வை எனது முன்னாள் கணவர் என்று சொல்கின்றனர். ஆனால், அது உண்மையில்லை. எங்களுக்கு இன்னும் சட்டப்படி விவாகரத்து ஆகவில்லை. நாங்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். சிங்கிள் மதரா என் குழந்தைகளை வளர்க்க ரொம்பவே கஷ்டப்படுறேன். செவ்வந்தி டீம் எனக்கு ரொம்ப சப்போர்ட்டிவா இருக்காங்க. இப்ப நான் ரொம்பவே சந்தோஷமா இருக்கேன். நான் பிக்பாஸ் போறதா சிலர் சொல்றாங்க. என்னால் என் குழந்தைகளை பிரிஞ்சு இருக்க முடியாது. அதனால நான் பிக்பாஸ் வீட்டுக்கு போகல. நீங்க எல்லாரும் எனக்கு உறுதுணையா பக்கபலமா இருக்கீங்க. உங்க எல்லோருக்கும் நன்றி. உங்க எல்லாத்துக்கும் நான் கொடுக்கிற அட்வைஸ் ஒண்ணு தான் யாரையும் நம்பாதீங்க' என அந்த வீடியோவில் அவர் பேசியிருக்கிறார்.