நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சின்னத்திரை நடிகரான வெற்றி வசந்த் 'சிறகடிக்க ஆசை' தொடரின் மூலம் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுள்ளார். அவர் நடித்து வரும் முத்து கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மத்தியில் அவரது அடையாளமாக மாறிவிட்டது. அந்த அளவிற்கு மக்களால் நேசிக்கப்படும் வெற்றி வசந்த், சக நடிகையான வைஷ்ணவியை காதலித்து வந்தார். இருவருக்கும் அண்மையில் தான் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. அடுத்த தீபாவளிக்கெல்லாம் தலை தீபாவளி கொண்டாட ஆயத்தமாகும் வெற்றி வசந்த் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னால் மறக்க முடியாத தீபாவளி குறித்து கூறியுள்ளார்.
அதில், ''நான் எப்போதுமே என் அப்பாவுடன் தான் படம் பார்க்க செல்வேன். தனியாக செல்ல அப்பா அனுமதிக்க மாட்டார். அப்படியிருக்க கத்தி படம் ரிலீஸான தீபாவளி அன்று தான் முதன்முதலில் தனியாக படத்திற்கு செல்ல அப்பாவிடம் பயத்துடன் அனுமதி கேட்டேன். அப்பாவும் அப்போது அனுமதித்துவிட்டார். அதன்பிறகு பல முறை சினிமாவிற்கு தனியாக சென்றிருந்தாலும், கத்தி பட தீபாவளி தான் என்னால் மறக்க முடியாத தீபாவளி' என்று கூறியுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் வெற்றி வசந்துக்கு தனது தந்தையின் மேல் இவ்வளவு பயபக்தியா? என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.