நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
புஷ்பா 2 படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது அட்லி இயக்கும் தனது 22வது படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார் அல்லு அர்ஜுன். 600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் சயின்ஸ் பிக்ஷன் கதையில் உருவாகிறது. இப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அல்லு அர்ஜுனை வாழ்த்தி தனது இணையப்பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார் சமந்தா.
அதில், இந்த அபாரமான நடிகரின் வளர்ச்சியை காண பொறுமையாக இருக்க முடியவில்லை. திரையில் உங்களைப் பார்த்தாலே இன்ப அதிர்ச்சிதான். உங்களது எல்லைகளை தாண்டி ஒவ்வொரு முறையும் அளிக்கும் பங்களிப்பு அபாரம். உங்களின் ஆரோக்கியம் ஆற்றல் குறையாமல் இருந்து நீங்கள் நேசிக்கும் காரியங்களை தொடர்ந்து சிறப்பாக செய்ய இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும் என்று அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார் சமந்தா. அவர் வெளியிட்டுள்ள இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.