திருமணத்திற்கு பிறகு மும்பையில் குடியேறிய சமந்தா! | 'ஜனநாயகன்' டிக்கெட் முன்பதிவு தொடங்கியது! ஜெர்மனியில் 5.5 லட்சம் வரை வசூல்!! | 'தி கேர்ள்ப்ரெண்ட்' பட முழு ஸ்கிரிப்ட்டையும் ஆன்லைனில் அப்லோடு செய்த இயக்குனர் | சென்சார் கெடுபிடி காட்டிய இளம் நடிகரின் பட ரிலீசுக்கு உயர்நீதிமன்றம் கிரீன் சிக்னல் | மலேசியாவில் அஜித்தை சந்தித்த ஸ்ரீ லீலா | சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பெண்கள் அணி: சங்க தலைவர் பரத் தகவல் | நான் சொல்வதை அவன் கேட்கமாட்டான்: கூல் சுரேஷ் குறித்து சந்தானம் | தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை! - தமன் ஆதங்கம் | 'மனா சங்கரா வரபிரசாந்த் காரு' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! | பிளாஷ்பேக்: 'நடிப்பிசைப் புலவர்' கே ஆர் ராமசாமியை நாடறியும் நடிகனாக்கிய “பூம்பாவை” |

தெலுங்கு திரையுலகில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக நாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் பயணித்து வருபவர் நடிகர் மோகன்பாபு. இவருக்கு ஜலபள்ளி என்கிற கிராமத்தில் சொந்த வீடு இருக்கிறது. கடந்த 22ம் தேதி மோகன்பாபுவின் செகரட்டரி திருப்பதியில் இருந்து தனது பயணத்தை முடித்துக் கொண்டு இந்த வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். அப்போது தன்னிடம் இருந்த 10 லட்சம் ரூபாய் தொகையை அங்கிருந்து அறை ஒன்றில் வைத்துள்ளார். ஆனால் மறுநாள் காலை பார்க்கும்போது அவருடைய அறையில் இருந்து அந்த பணம் காணாமல் போயிருந்தது. இது குறித்து அவர் போலீசாரிடம் புகார் செய்தார்.
இதனை தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அங்கே பணியாற்றிய கணேஷ் நாயக் என்கிற பணியாளரின் செயல்பாடுகள் சந்தேகத்துக்கு இடம் அளிப்பதாக உணர்ந்தனர். மேலும் சில ஆதாரங்களை திரட்டி அவரை தேடும் பணியில் ஈடுபட்ட போலீசார் திருப்பதியில் வைத்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 7.3 லட்சம் ரூபாய் தொகையையும் கைப்பற்றினர். மோகன்பாபு வீட்டில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




