பட்டங்கள் வாழ்க்கைக்கு உதவுவதில்லை : ராஷ்மிகா | ஷங்கர் இயக்கத்தில் துருவ் விக்ரம்? | கேங்கர்ஸ் படத்தில் ஜந்து கெட்டப்பில் வடிவேலு! | பிளாஷ்பேக்: டைட்டில் பிரச்னை காரணமாக சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய ஸ்ரீதேவி | தவறுகள் செய்ய சல்மான் கான் பயப்பட மாட்டார் ; இயக்குனர் சூரஜ் பார்ஜாத்யா ஓபன் டாக் | மோகன்லாலின் எம்புரான் படத்தால் மீண்டும் தள்ளிப்போகிறது வீரதீரசூரன் ரிலீஸ் | லிப்லாக் காட்சியில் நடிக்க பிரதீப் ரங்கநாதனை வலியுறுத்திய இயக்குனர்கள் | காதலர் தினத்தில் காதலரை அறிமுகம் செய்த பிக்பாஸ் ஜாக்குலின் | மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பாளர் போர்க்கொடி ; கீர்த்தி சுரேஷின் தந்தைக்கு வலுக்கும் எதிர்ப்பு | எல்லோருக்குள்ளும் இதயம் முரளி இருக்கிறார்: அதர்வா நெகிழ்ச்சி |
தெலுங்கு திரையுலகில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக நாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் பயணித்து வருபவர் நடிகர் மோகன்பாபு. இவருக்கு ஜலபள்ளி என்கிற கிராமத்தில் சொந்த வீடு இருக்கிறது. கடந்த 22ம் தேதி மோகன்பாபுவின் செகரட்டரி திருப்பதியில் இருந்து தனது பயணத்தை முடித்துக் கொண்டு இந்த வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். அப்போது தன்னிடம் இருந்த 10 லட்சம் ரூபாய் தொகையை அங்கிருந்து அறை ஒன்றில் வைத்துள்ளார். ஆனால் மறுநாள் காலை பார்க்கும்போது அவருடைய அறையில் இருந்து அந்த பணம் காணாமல் போயிருந்தது. இது குறித்து அவர் போலீசாரிடம் புகார் செய்தார்.
இதனை தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அங்கே பணியாற்றிய கணேஷ் நாயக் என்கிற பணியாளரின் செயல்பாடுகள் சந்தேகத்துக்கு இடம் அளிப்பதாக உணர்ந்தனர். மேலும் சில ஆதாரங்களை திரட்டி அவரை தேடும் பணியில் ஈடுபட்ட போலீசார் திருப்பதியில் வைத்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 7.3 லட்சம் ரூபாய் தொகையையும் கைப்பற்றினர். மோகன்பாபு வீட்டில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.