தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
தெலுங்கு திரையுலகில் அடுத்ததாக பான் இந்திய ரிலீஸ் ஆக மிகப்பெரிய வெளிஈட்டிற்கு தயாராகி வரும் படம் 'கண்ணப்பா'. முகேஷ் குமார் சிங் இயக்கி உள்ள இந்த படத்தில் நடிகர் விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடிக்க, மிக முக்கியமான வேடங்களில் நடிகர்கள் மோகன்லால், அக்ஷய் குமார், பிரபாஸ் ஆகியோர் சிறப்பு தோற்றங்களில் நடித்துள்ளனர். நடிகர் மோகன் பாபு இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் அவரும் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார். வரும் ஜூன் 27ம் தேதி இந்த படம் வெளியாவதை முன்னிட்டு இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கேரளாவில் நடைபெற்ற இந்த புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் மோகன்லால் கலந்து கொண்டார்.
அப்போது இப்போது பேசிய மோகன்லால், “மோகன்பாபு ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும். அவருக்கு வில்லனாக நான் நடிக்க வேண்டும்” என்கிற தனது ஆசையை வெளிப்படுத்தினார். உடனே மோகன்பாபு, “இல்லை நீங்கள் ஹீரோவாக நடிக்கணும். நான் தான் உங்களுக்கு வில்லனாக நடிக்கணும்” என்று பதிலுக்கு கூறினார்.
உடனே மோகன்லால், “கிட்டத்தட்ட 560 படங்களில் நடித்து விட்டீர்கள். ஏன் உங்களுக்கு இப்படி வில்லனாக நடிக்கும் ஆசை ? அப்படி ஒருவேளை நீங்கள் என் படத்தில் வில்லனாக நடித்தே தீருவேன் என்றால் உங்களை முதல் காட்சியிலேயே சுட்டுக் கொன்று விடுவேன்” என்று ஜாலியாக கூறினார். மோகன்லால், மோகன்பாபு இருவரும் இணைந்து எந்த படத்தில் நடிக்காவிட்டாலும் கூட பல வருட காலம் நட்பு இவர்களுக்குள் உண்டு என்பதை இந்த நிகழ்வில் கண்கூடாக பார்க்க முடிந்தது.