தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
சினிமா பிரபலங்களாக இருந்தாலும் அவர்கள் அனைவருமே கிரிக்கெட் வீரர்களுக்கு ரசிகர்களாக இருப்பதை ஒவ்வொரு விளையாட்டுப் போட்டியின் போதும் ஸ்டேடியத்தில் பார்க்க முடியும். அந்த வகையில் நடிகை நவ்யா நாயர் தனது பேவரைட் கிரிக்கெட் வீரரான இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலியை சமீபத்தில் லண்டனில் சந்தித்துள்ளார்.
தமிழில் 'அழகிய தீயே, ராமன் தேடிய சீதை, மாயக்கண்ணாடி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலான இவர் நடன பயிற்சி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் லண்டனுக்கு சுற்றுலா சென்றிருந்த நவ்யா நாயர் அங்கே, தான் ஆராதிக்கும் கிரிக்கெட் ஜாம்பவானாக கங்குலியை நேரில் சந்திக்கும் வாய்ப்பை பெற்றார்.
அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள நவ்யா நாயர், “என்னுடைய லண்டன் சுற்றுப்பயணத்தில் ஒன் அண்ட் ஒன்லி சவுரவ் கங்குலியை சந்தித்தது இன்னும் ஒரு கனவு போலவே இருக்கிறது. ஒரு பள்ளி மாணவியாக தொலைக்காட்சியில் பெங்கால் தாதா விளையாடியதைப் பார்த்து கொண்டாடிய எனக்கு இன்று அவரை நேரில் சந்திக்கும் இந்த தருணம் என்றென்றும் நினைவில் இருந்து அகலாது” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.