பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் | படையப்பா ரீ ரிலீஸில் வசூல் எவ்வளவு தெரியுமா? |

நடிகை குஷ்புவின் கணவரான, இயக்குனர் சுந்தர்.சி தற்போது நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை அடுத்து ரஜினியின் 173-வது படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் அவர் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு வெளியான சில தினங்களிலேயே அப்படத்திலிருந்து தான் விலகுவதாக ஒரு அறிக்கை வெளியிட்டார் சுந்தர்.சி. அதையடுத்து அவர் சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்கிற தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் அந்த அறிவிப்பு வெளிவந்ததிலிருந்தே குஷ்புவின் சோசியல் மீடியாவில் சிலர் மோசமான கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள். ஒருவர் சுந்தர். சியின் பரிதாபகரமான கதை விவரிப்பு காரணமாக ரஜினியும், கமலும் உங்கள் கணவரை தாங்கள் தயாரிக்கும் படத்திலிருந்து வெளியேற்றி விட்டதாக கேள்விப்பட்டோம். அப்படியானால் இந்திய திரையுலகம் உங்கள் கணவர் சுந்தர்.சியை குப்பை தொட்டியில் போட வேண்டிய நேரமா? என்பது உள்ளிட்ட பலதரப்பட்ட கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள். இதனால் கடும் கோபத்திற்கு ஆளான குஷ்பூ, தனது எக்ஸ் பக்கத்தில், என் செருப்பு சைஸ் 41. அடி வாங்க தயாரா? என்று ஒரு பதிவு போட்டுள்ளார். இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.