மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
ஹிந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த குஷ்பு, தமிழில் 'வருஷம் 16' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர். 90களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக கலக்கிய குஷ்பு, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, சரத்குமார் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதேபோல சிறிய நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார்.
சின்னத்திரையிலும் தனது ஆதிக்கத்தை செலுத்திய குஷ்பு, தற்போது சினிமாவில் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் குஷ்பு காலடி எடுத்து வைத்து 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
7 வயதில் குழந்தையாக நடிக்க தொடங்கிய நான், இன்று 45 ஆண்டுகளை கடந்துள்ளேன். உற்சாகமான இந்த பயணத்தில் நிறைய விஷயங்களை கற்றுள்ளேன். என்னுடன் இணைந்து நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அத்தனை பேருமே சிறப்பானவர்கள்.
ஒரு நடிகை என்பதை தாண்டி வேறு எதையுமே என்னால் நினைக்க முடியவில்லை. இந்த மாபெரும் பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்தவர்கள், எனக்கு ஆதரவு தந்தவர்கள், ஊக்குவித்தவர்கள், விமர்சித்தவர்கள், கற்றுக்கொடுத்தவர்கள், அன்பு செலுத்தியவர்கள் எல்லாவற்றையும் விட என்னை நம்பியவர்கள் அத்தனை பேருக்கும் நன்றி. இனியும் எனது சிறப்பான பங்களிப்பை தொடர்ந்து வழங்குவேன்.
இவ்வாறு குஷ்பு பதிவிட்டுள்ளார்.