சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

ஏற்கனவே கலகலப்பு, கலகலப்பு- 2 என்ற இரண்டு படங்களை இயக்கிய சுந்தர். சி அடுத்து அப்படத்தின் மூன்றாவது பாகத்தையும் இயக்கப் போகிறார். இது குறித்த ஒரு தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை குஷ்பூ. இந்த படத்தை துபாய் தொழிலதிபர் கண்ணன் ரவி என்பவர் தயாரிக்கிறார். அவருடன் இணைந்து குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் நிறுவனமும் இந்த கலகலப்பு-3 படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகிறது. 2025ம் ஆண்டில் இந்த படம் திரைக்கு வர உள்ளது. மேலும் இந்த தொழிலதிபர் கண்ணன் ரவி ஏற்கனவே தமிழில் சாந்தனு நடித்த 'ராவணக் கோட்டம்' என்ற படத்தை தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.