கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

ஏற்கனவே கலகலப்பு, கலகலப்பு- 2 என்ற இரண்டு படங்களை இயக்கிய சுந்தர். சி அடுத்து அப்படத்தின் மூன்றாவது பாகத்தையும் இயக்கப் போகிறார். இது குறித்த ஒரு தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை குஷ்பூ. இந்த படத்தை துபாய் தொழிலதிபர் கண்ணன் ரவி என்பவர் தயாரிக்கிறார். அவருடன் இணைந்து குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் நிறுவனமும் இந்த கலகலப்பு-3 படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகிறது. 2025ம் ஆண்டில் இந்த படம் திரைக்கு வர உள்ளது. மேலும் இந்த தொழிலதிபர் கண்ணன் ரவி ஏற்கனவே தமிழில் சாந்தனு நடித்த 'ராவணக் கோட்டம்' என்ற படத்தை தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.