Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி, கமல் படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி : மன்னிப்பு கேட்டு அறிக்கை

13 நவ, 2025 - 02:34 IST
எழுத்தின் அளவு:
Sundar-C-walks-out-of-Rajinikanth-film
Advertisement

ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173 வது படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார் என்றும், இயக்குனர் சுந்தர்.சி இந்த படத்தை இயக்குகிறார் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அருணாச்சலம் படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட 28 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினியை இயக்கும் வாய்ப்பு சுந்தர்.சிக்கு கிடைத்தது. இவர்கள் கூட்டணியில் மீண்டும் கலகலப்பான ஒரு படத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், தற்போது இந்த படத்தில் இருந்து தான் விலகிவிட்டதாக இயக்குனர் சுந்தர்.சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பில் அவர் கூறும்போது, “கனத்த இதயத்துடன் சில முக்கியமான செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால், #தலைவர் 173 என்ற மதிப்புமிக்க படத்தில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுத்துள்ளேன். ரஜினிகாந்த் நடிக்க, கமல்ஹாசன் இந்தப்படத்தை தயாரிபில் இது உண்மையில் எனக்கு ஒரு கனவு நனவாகும் படம் தான். ஆனால், வாழ்க்கையில், நம் கனவுகளிலிருந்து வேறுபட்டாலும், நமக்காக வகுக்கப்பட்ட பாதையை நாம் பின்பற்ற வேண்டிய தருணங்கள் உள்ளன. இந்த இரண்டு ஜாம்பவான்களை, நான் எப்போதும் மிக உயர்ந்த மதிப்பில் வைத்திருப்பேன். கடந்த சில நாட்களாக நாங்கள் பகிர்ந்து கொண்ட சிறப்பு தருணங்கள் எனக்கு என்றென்றும் மனதில் வைத்து போற்றப்படுபவை.

இந்த வாய்ப்பிலிருந்து நான் விலகிச் சென்றாலும், அவர்களின் வழிகாட்டுதலை நான் தொடர்ந்து நாடுவேன். இந்த மகத்தான படைப்பிற்காக என்னைக் கருத்தில் கொண்டதற்காக அவர்கள் இருவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுகிறேன். இந்தச் செய்தி இந்த முயற்சியை ஆவலுடன் எதிர்பார்த்தவர்களை ஏமாற்றியிருந்தால் எனது மனமார்ந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். மேலும் உங்கள் உற்சாகத்தை உயர்த்தும் பொழுதுபோக்குகளைத் தொடர்ந்து வழங்குவதாக உறுதியளிக்கிறேன். உங்கள் அசைக்க முடியாத ஆதரவுக்கும் புரிதலுக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.

ரஜினி - கமல் இருவரும் இணையும் மெகா புராஜெக்ட் நமக்கு கிடைத்து விடாதா என பல இயக்குனர்கள் தவம் இருக்கும் நிலையில் இப்படத்தில் இருந்து சுந்தர்.சி விலகியது ரசிகர்களிடம் மட்டுமல்ல, திரையுலகினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இதற்கான பின்னணி காரணம் என்பது இனி வரும் நாட்களில் தெரிய வரலாம்..

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கொரில்லா பாணியில் நடந்த யெல்லோ படப்பிடிப்புகொரில்லா பாணியில் நடந்த யெல்லோ ... ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap