'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் |

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் கூட்டணியில் புதிய படம் உருவாவதாக அறிவித்தாலும், இன்னும் கதை, இயக்குனர் முடிவாகவில்லை என ரஜினியே கூறியிருந்தார். இதற்கிடையில் ரஜினி குறுகிய கால கட்டத்தில் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தார். அப்படத்தை கமல் தயாரிப்பதாகவும் அதற்கான அறிவிப்பு கமல் பிறந்தநாளான நவ.,7ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இன்றே (நவ.,5) அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை கமல் வெளியிட்டுள்ளார்.
இந்தப் படம் வரும் 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காற்றாய் மழையாய் நதியாய் பொழிவோம் மகிழ்வோம் வாழ்வோம்! ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் இனிய நண்பர் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 173'' எனப்பதிவிட்டுள்ளார்.




