‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் கூட்டணியில் புதிய படம் உருவாவதாக அறிவித்தாலும், இன்னும் கதை, இயக்குனர் முடிவாகவில்லை என ரஜினியே கூறியிருந்தார். இதற்கிடையில் ரஜினி குறுகிய கால கட்டத்தில் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தார். அப்படத்தை கமல் தயாரிப்பதாகவும் அதற்கான அறிவிப்பு கமல் பிறந்தநாளான நவ.,7ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இன்றே (நவ.,5) அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை கமல் வெளியிட்டுள்ளார்.
இந்தப் படம் வரும் 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காற்றாய் மழையாய் நதியாய் பொழிவோம் மகிழ்வோம் வாழ்வோம்! ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் இனிய நண்பர் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 173'' எனப்பதிவிட்டுள்ளார்.