வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அவதூறாக பேசிய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் அப்படி பேசியதற்கு எதிராக பல திரை பிரபலங்களும் அவருக்கு கண்டனம் தெரிவித்தார்கள். அதோடு நடிகை குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்து மன்சூரலிகானை கைது செய்ய வைத்தார். மேலும், தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவியும் திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
இந்த விவகாரம் சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், அது குறித்து திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார் மன்சூர் அலிகான். என்றாலும் தற்போது அவர் திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்டஈடு வழக்கு தொடரப்போவதாக சொல்லி இன்னொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதன் காரணமாக இந்த பிரச்னை இத்தோடு முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் புதிய பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.




