கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
தெலுங்கில் முன்னணி நடிகர் மோகன்பாபு. இவரது மகன் விஷ்னு மஞ்சு, மகள் லட்சுமி மஞ்சு ஆகியோர் நடித்து வருகிறார்கள். இதில் லட்சுமி மஞ்சு தமிழில் கடல், காற்றின் மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாள படமொன்றில் மம்முட்டியுடன் நடித்து வருகிறார். தெலுங்கில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.
இந்த நிலையில் முதன் முறையாக தனது தந்தை மோகன்பாபுவுடன் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடந்தது. இதுகுறித்து லட்சுமி மஞ்சு கூறியிருப்பதாவது: எனது நீண்டநாள் கனவு இது. எனது முதல் ஹீரோ தந்தையுடன் இணைந்து நடிக்கிறேன். இத்தனை வருடங்களுக்கு பிறகு அவருடன் இணைந்து நடிப்பது ஒரு பெரிய விருது பெற்றது போல் இருக்கிறது. இந்த நாளுக்காகத்தான் இவ்வளவு காலம் காத்திருந்தேன். தொடர்ந்து முயற்சித்தால் நம் கனவு ஒரு நாள் நனவாகும், என் விஷயத்தில் அது நடந்திருக்கிறது. என்கிறார்.
இந்த படத்தில் மலையாள நடிகர் சித்திக் முக்கிய கேரக்டரில் நடிக்கிறர். பாலிவுட் இயக்குனர் பிரத்திக் பிரஜோஸ் இயக்குகிறார். டைமண்ட் ரத்னபாபு கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். சாய் பிரகாஷ் இசை அமைக்கிறார். பிரியதர்சன் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். மார்ச் மாதம் படப்பிடிப்பை தொடங்கி ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டிருக்கிறர்கள். இது ஒரு க்ரைம் த்ரில்லர் வகை படம்.