டொவினோ தாமஸ், கயாடு லோகரின் பள்ளிச்சட்டம்பி ரிலீஸ் தேதி அறிவிப்பு | சத்தா பச்சா பட முதல் டிக்கெட்டை வாங்கி ஆன்லைன் விற்பனையை துவங்கி வைத்த மோகன்லால் | ரீல்ஸ் வீடியோ மூலம் மம்முட்டிக்கு ஜோடியான பல்கலைக்கழக பெண் அதிகாரி | பிளாஷ்பேக் : சூசைட் பாயிண்ட்டில் ‛நாயகன்' பட நடிகையின் உயிரை காப்பாற்றிய மோகன்லால் | முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நீண்ட காத்திருப்பு | 100 கோடி கிளப்பில் ‛பராசக்தி' : சிவகார்த்திகேயனுக்கு 5வது படம் | இப்பவும் கதை கேட்கும்போது துாங்குறீங்களா? : அஸ்வின் சொன்ன பதில் | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமண ஏற்படுகள் தீவிரம் | தெலங்கானா : டிக்கெட் கட்டண உயர்வுக்கு 90 நாள் விதி | 'இளையராஜா' பயோபிக் இந்த வருடமாவது ஆரம்பமாகுமா ? |

மலையாள திரையுலகில் இளம் முன்னணி நடிகராக மாறி வருபவர் டொவினோ தாமஸ். தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை, கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து வெற்றியை ருசித்து வரும் டொவினோ தாமஸ் நடிப்பில் சமீபத்தில் அஜயன்டே ரெண்டாம் மோசனம் (ஏஆர்எம்) என்கிற பீரியட் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் மூன்று விதமான கதாபாத்திரங்களில் நடித்து பிரமிக்க வைத்தார் டொவினோ தாமஸ். இந்த படம் கிட்டத்தட்ட 100 கோடி வசூல் இலக்கை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியை நேரில் சந்தித்துள்ளார் டொவினோ தாமஸ். தற்போது சூர்யா தயாரிப்பில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் இன்று (செப்-27) வெளியாகிறது. இந்த படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக கேரளாவுக்கு வருகை தந்த சமயத்தில் தான் சூர்யாவையும், கார்த்தியையும் டொவினோ நேரில் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து மகிழ்ச்சியுடன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள டொவினோ தாமஸ், “நான் ஒரு நடிகராக உருவாவதற்கு கார்த்தி, சூர்யா இருவருமே எனக்கு அவரவர் வழியில் தூண்டுதலாக இருந்திருக்கிறார்கள். இன்று இந்த அற்புதமான இரண்டு நடிகர்களுக்கு இடையில் நான் நின்று கொண்டிருக்கிறேன். எப்போதுமே இவர்களுடைய தாக்கத்தை என்னுடைய பயணத்தில் ஏற்றுக் கொள்ளவே விரும்புகிறேன். இவர்களை சந்தித்து சிறிது நேரம் செலவிட்டதில் மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று வெளியாகும் கார்த்தியின் மெய்யழகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.




