தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
மகாபாரதத்தில் வரும் மிக முக்கியமான கதாபாத்திரம் பீஷ்மர். சினிமா கண்டுபிடிக்கப்படாத காலத்திலேயே 'பீஷ்மர்' என்ற பெயரில் இந்திய மொழிகள் அனைத்திலும் நாடகமாக நடத்தப்பட்டது. சினிமா வந்த பிறகு மவுன படங்களாக 'பீஷ்மர்' கதை படமானது. முதல் மவுன படம் 1921ம் ஆண்டு அப்போதிருந்த பிரபல இயக்குனர் ஆர்.பிரகாஷ் தயாரித்து இயக்கினார். அதன் பிறகும் இரண்டு மவுன படங்கள் உருவானது.
முதன் முறையாக பீஷ்மர் பேசியது தமிழ் படத்தில்தான். 1936ம் ஆண்டில் தமிழில் உருவான படம் 'பீஷ்மரின் பிரதிக்னா' (பீஷ்மரின் சபதம்). இந்த படத்தை பி.ஒய்.அட்லேகர் என்பவர் இயக்கினார். எம்.எஸ்.தாமோதர ராவ், சிவானந்தம், எம்.மீனாட்சிசுந்தரம், கே.ஆர்.காந்திமதி பாய், டி.எஸ்.ஜெயா, லட்சுமிநாராயண பாகவதர், 'தாடி' ஆர்.வி.கே. முதலியார், என்.சண்முகம், டி.பி.மானோஜி ராவ், பி.எஸ்.சிவபாக்யம், ஜெயலட்சுமி,கே.ஆர். லட்சுமி, சி.கே.செல்வாம்பாள், 'பேபி' எம்.ஆர்.மங்கலம் உள்ளிட்ட பலர் நடித்தனர். சேலம் பிலிம் கம்பெனி தயாரித்தது. பாபநாசம் சிவன் இசை அமைத்திருந்தார். 23 பாடல்கள் படத்தில் இடம்பெற்றிருந்தது. 'பீஷ்மர் முதன் முறையாக தமிழில் பேசும் படம்' என்றே படத்திற்கு விளம்பரமும் செய்யப்பட்டது.