100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | 'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' | ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! |

மகாபாரதத்தில் வரும் மிக முக்கியமான கதாபாத்திரம் பீஷ்மர். சினிமா கண்டுபிடிக்கப்படாத காலத்திலேயே 'பீஷ்மர்' என்ற பெயரில் இந்திய மொழிகள் அனைத்திலும் நாடகமாக நடத்தப்பட்டது. சினிமா வந்த பிறகு மவுன படங்களாக 'பீஷ்மர்' கதை படமானது. முதல் மவுன படம் 1921ம் ஆண்டு அப்போதிருந்த பிரபல இயக்குனர் ஆர்.பிரகாஷ் தயாரித்து இயக்கினார். அதன் பிறகும் இரண்டு மவுன படங்கள் உருவானது.
முதன் முறையாக பீஷ்மர் பேசியது தமிழ் படத்தில்தான். 1936ம் ஆண்டில் தமிழில் உருவான படம் 'பீஷ்மரின் பிரதிக்னா' (பீஷ்மரின் சபதம்). இந்த படத்தை பி.ஒய்.அட்லேகர் என்பவர் இயக்கினார். எம்.எஸ்.தாமோதர ராவ், சிவானந்தம், எம்.மீனாட்சிசுந்தரம், கே.ஆர்.காந்திமதி பாய், டி.எஸ்.ஜெயா, லட்சுமிநாராயண பாகவதர், 'தாடி' ஆர்.வி.கே. முதலியார், என்.சண்முகம், டி.பி.மானோஜி ராவ், பி.எஸ்.சிவபாக்யம், ஜெயலட்சுமி,கே.ஆர். லட்சுமி, சி.கே.செல்வாம்பாள், 'பேபி' எம்.ஆர்.மங்கலம் உள்ளிட்ட பலர் நடித்தனர். சேலம் பிலிம் கம்பெனி தயாரித்தது. பாபநாசம் சிவன் இசை அமைத்திருந்தார். 23 பாடல்கள் படத்தில் இடம்பெற்றிருந்தது. 'பீஷ்மர் முதன் முறையாக தமிழில் பேசும் படம்' என்றே படத்திற்கு விளம்பரமும் செய்யப்பட்டது.