சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
மகாபாரதத்தில் வரும் மிக முக்கியமான கதாபாத்திரம் பீஷ்மர். சினிமா கண்டுபிடிக்கப்படாத காலத்திலேயே 'பீஷ்மர்' என்ற பெயரில் இந்திய மொழிகள் அனைத்திலும் நாடகமாக நடத்தப்பட்டது. சினிமா வந்த பிறகு மவுன படங்களாக 'பீஷ்மர்' கதை படமானது. முதல் மவுன படம் 1921ம் ஆண்டு அப்போதிருந்த பிரபல இயக்குனர் ஆர்.பிரகாஷ் தயாரித்து இயக்கினார். அதன் பிறகும் இரண்டு மவுன படங்கள் உருவானது.
முதன் முறையாக பீஷ்மர் பேசியது தமிழ் படத்தில்தான். 1936ம் ஆண்டில் தமிழில் உருவான படம் 'பீஷ்மரின் பிரதிக்னா' (பீஷ்மரின் சபதம்). இந்த படத்தை பி.ஒய்.அட்லேகர் என்பவர் இயக்கினார். எம்.எஸ்.தாமோதர ராவ், சிவானந்தம், எம்.மீனாட்சிசுந்தரம், கே.ஆர்.காந்திமதி பாய், டி.எஸ்.ஜெயா, லட்சுமிநாராயண பாகவதர், 'தாடி' ஆர்.வி.கே. முதலியார், என்.சண்முகம், டி.பி.மானோஜி ராவ், பி.எஸ்.சிவபாக்யம், ஜெயலட்சுமி,கே.ஆர். லட்சுமி, சி.கே.செல்வாம்பாள், 'பேபி' எம்.ஆர்.மங்கலம் உள்ளிட்ட பலர் நடித்தனர். சேலம் பிலிம் கம்பெனி தயாரித்தது. பாபநாசம் சிவன் இசை அமைத்திருந்தார். 23 பாடல்கள் படத்தில் இடம்பெற்றிருந்தது. 'பீஷ்மர் முதன் முறையாக தமிழில் பேசும் படம்' என்றே படத்திற்கு விளம்பரமும் செய்யப்பட்டது.