ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
கடந்த வருடம் மலையாளத்தில் தி கேரளா ஸ்டோரி என்கிற படம் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பாவி ஹிந்து பெண்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றி வெளிநாட்டில் உள்ள ஐஎஸ்ஐ பயங்கரவாதிகள் குழுவிற்கு அனுப்பி வைக்கும் கும்பலை பற்றிய ஒரு கதையாக உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகி இருந்தது.
மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூலையும் ஈட்டியது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தற்போது அதற்கான கதை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் படத்தின் இயக்குனர் சுதீப்தோ சென்.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் கேரளாவில் வெளியாகி மலையாள திரையுலகையே ஒரு உலுக்கு உலுக்கிய நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கையில் சொல்லப்பட்ட விஷயங்களை மையப்படுத்தி உருவாகிறது என சோசியல் மீடியாவில் ஒரு தகவல் பரவ ஆரம்பித்தது. இந்த படத்தின் இயக்குனர் சுதீப்தோ சென் இந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை என்றும் இந்த செய்தியை பார்த்துவிட்டு நானும் தயாரிப்பாளர் விபுல்ஷாவும் விழுந்து விழுந்து சிரித்தோம் என்று கூறியுள்ளார். அதே சமயம் இந்த இரண்டாம் பாகம் எந்த பின்னணியில் உருவாகிறது என்பதை பற்றி அவர் மூச்சுக் கூட விடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.