இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
மலையாளத்தில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்து வருபவர் இடவேள பாபு. இவர் கடந்த மாதம் வரை மலையாள நடிகர் சங்கத்தில் செயலாளராகவும் பொறுப்பு வைத்து வந்தார். கடந்த மாதம் இவர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அதன் பிறகு வெளியான ஹேமா கமிஷன் அறிக்கையை தொடர்ந்து பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து காவல் துறையில் புகார்கள் அளிக்க தொடங்கினர்.
அதில் நடிகர் இடைவேள பாபு உள்ளிட்ட சில நடிகர்கள் மீது நடிகை மினு முனீர் என்பவர் பாலியல் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தற்போது இது குறித்த விசாரணைக்கு அவரை வரவழைத்த போலீசார் அவரிடம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் விசாரணை செய்தனர். விசாரணையின் முடிவில் அவரை கைது செய்த போலீசார் அதன் பிறகு அவரை ஜாமினில் விடுவித்தனர்.