இளையராஜாவிற்கு பாராட்டு விழா : அரங்கம் அதிர இன்னிசை மழை ; முதல்வர், ரஜினி, கமல் பங்கேற்பு | நான் சரியான வாழ்க்கை துணையாக மாற முயற்சிக்கிறேன் : தமன்னா | கருவிலே உயிர் உருவாகும்போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது : ஜாய் கிரிசில்டா பதிவு | ‛‛நான் தான் சிஎம்'' : பார்த்திபன் வெளியிட்ட அறிவிப்பு | சேதுராஜன் ஐபிஎஸ் : மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபுதேவா | மீண்டும் ஒரு சர்வைவல் திரில்லரில் நடிக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரின் அரசியல் படத்தில் கைகோர்த்த நிவின்பாலி | ஹன்சிகா மீது பதியப்பட்ட எப்ஐஆரை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இளையராஜா இசையில் உருவாகும் ஈழத்தமிழ் படம் | வெற்றிமாறன் படக் கம்பெனியை மூடியது ஏன் |
மலையாள திரையுலகில் விருதுகளை குறிவைத்து படம் இயக்கும் இயக்குனர் சணல்குமார் சசிதரன். அப்படி இவர் நடிகை மஞ்சு வாரியரை கதாநாயகியாக வைத்து காயாட்டம் என்கிற படத்தை இயக்கினார். ஆனால் படம் முடிந்த நிலையில் மஞ்சு வாரியருக்கும், சணல் குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனாலேயே இன்னும் கூட படம் வெளியாகவில்லை.. இதனால் மஞ்சு வாரியருக்கு சிலரால் ஆபத்து என்பது போல சோசியல் மீடியாவில் பதிவுகளை வெளியிட்டார் சணல்குமார் சசிதரன்.
தன் மீது வீணாக அவதூறு பரப்புகிறார் என அவர் மீது போலீசில் புகார் அளித்தார் மஞ்சு வாரியர். இதனை தொடர்ந்து அப்போது கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார் சணல்குமார் சசிதரன். ஆனால் போலீசார் விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என கூறிய நிலையில் அவர் வெளிநாட்டிற்கு சென்று விட்டார். இதனால் அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டிருந்தது. சமீபத்தில் அவர் அமெரிக்காவிலிருந்து கேரளா திரும்புவதற்காக மும்பை விமான நிலையம் வந்து இறங்கியபோது கேரளாவில் இருந்து அங்கே சென்ற போலீசார் அவரை கைது செய்து அழைத்து வந்தனர். அதன் பிறகு அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் தற்போது நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியுள்ளது..