ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி | பிளாஷ்பேக்: பிரிந்த இசை அமைப்பாளர்கள் | பிளாஷ்பேக்: முதல் பிளாஷ்பேக் படம் | பேயுடன் பர்ஸ்ட் நைட் கொண்டாடிய ஹீரோ: 'மெஸன்ஜர்' படத்தில் புதுமை | தெலுங்கில் தோல்வி அடைந்த பைசன்: தமிழில் விருதுகளை அள்ளுமா? | கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி |

மலையாள திரையுலகில் விருதுகளை குறிவைத்து படம் இயக்கும் இயக்குனர் சணல்குமார் சசிதரன். அப்படி இவர் நடிகை மஞ்சு வாரியரை கதாநாயகியாக வைத்து காயாட்டம் என்கிற படத்தை இயக்கினார். ஆனால் படம் முடிந்த நிலையில் மஞ்சு வாரியருக்கும், சணல் குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனாலேயே இன்னும் கூட படம் வெளியாகவில்லை.. இதனால் மஞ்சு வாரியருக்கு சிலரால் ஆபத்து என்பது போல சோசியல் மீடியாவில் பதிவுகளை வெளியிட்டார் சணல்குமார் சசிதரன்.
தன் மீது வீணாக அவதூறு பரப்புகிறார் என அவர் மீது போலீசில் புகார் அளித்தார் மஞ்சு வாரியர். இதனை தொடர்ந்து அப்போது கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார் சணல்குமார் சசிதரன். ஆனால் போலீசார் விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என கூறிய நிலையில் அவர் வெளிநாட்டிற்கு சென்று விட்டார். இதனால் அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டிருந்தது. சமீபத்தில் அவர் அமெரிக்காவிலிருந்து கேரளா திரும்புவதற்காக மும்பை விமான நிலையம் வந்து இறங்கியபோது கேரளாவில் இருந்து அங்கே சென்ற போலீசார் அவரை கைது செய்து அழைத்து வந்தனர். அதன் பிறகு அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் தற்போது நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியுள்ளது..