ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி | பிளாஷ்பேக்: பிரிந்த இசை அமைப்பாளர்கள் | பிளாஷ்பேக்: முதல் பிளாஷ்பேக் படம் | பேயுடன் பர்ஸ்ட் நைட் கொண்டாடிய ஹீரோ: 'மெஸன்ஜர்' படத்தில் புதுமை | தெலுங்கில் தோல்வி அடைந்த பைசன்: தமிழில் விருதுகளை அள்ளுமா? | கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி |

நடிகை பார்வதி மலையாள திரையுலகில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 20 வருடங்களை தொட போகிறார். இத்தனை வருடங்களில் அவர் நடித்தது குறைவான எண்ணிக்கை கொண்ட படங்களில் தான். காரணம் செலெக்ட்டிவ்வான நல்ல கதையும் கதாபாத்திரமும் கொண்ட கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் பார்வதி. இதுநாள் வரை உணர்வுபூர்வமான கதைகளில், பெண்ணியம் பேசும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
இந்தநிலையில் முதன் முறையாக 'பிரதம திருஷ்திய குற்றக்கார்' என்கிற போலீஸ் இன்வெஸ்டிகேஷன் கதையில் நடிக்கிறார். அது மட்டுமல்ல இந்த படத்தில் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார் பார்வதி. சாஹத் என்பவர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 25ம் தேதியிலிருந்து துவங்க இருக்கிறது என்கிற தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் பார்வதி.