ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

நடிகை பார்வதி மலையாள திரையுலகில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 20 வருடங்களை தொட போகிறார். இத்தனை வருடங்களில் அவர் நடித்தது குறைவான எண்ணிக்கை கொண்ட படங்களில் தான். காரணம் செலெக்ட்டிவ்வான நல்ல கதையும் கதாபாத்திரமும் கொண்ட கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் பார்வதி. இதுநாள் வரை உணர்வுபூர்வமான கதைகளில், பெண்ணியம் பேசும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
இந்தநிலையில் முதன் முறையாக 'பிரதம திருஷ்திய குற்றக்கார்' என்கிற போலீஸ் இன்வெஸ்டிகேஷன் கதையில் நடிக்கிறார். அது மட்டுமல்ல இந்த படத்தில் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார் பார்வதி. சாஹத் என்பவர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 25ம் தேதியிலிருந்து துவங்க இருக்கிறது என்கிற தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் பார்வதி.