சின்னத்திரையில் ஒரு சினிமா முயற்சி : நெஞ்சத்தைக் கிள்ளாதே அப்டேட் | மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய புகழ் | பிக்பாஸில் விஜய்சேதுபதி? - விக்ரமன் கூறிய கருத்து | சீரியலிலிருந்து விலகும் நேரம் வந்துவிட்டது - சதீஷ் | எதிர்பார்ப்பில் அடுத்தடுத்து சில படங்கள், என்னென்ன ? | அற்புதமான பெண்ணை பெற்ற நான் ஒரு அதிர்ஷ்டசாலி : பூஜா குமார் வெளியிட்ட பதிவு | ஸ்பிரிட் படத்தில் இரட்டை வேடத்தில் பிரபாஸ்? | 'வேட்டையன்' வரட்டும், ரஜினி ரசிகர்கள் வெயிட்டிங்… | இந்த வாரமும் தாக்குப் பிடிக்கும் 'தி கோட்' | தேவரா ரிலீஸ்: ஆடு பலியிட்டு ரத்த அபிஷேகம் செய்த ஜுனியர் என்டிஆர் ரசிகர்கள் |
கடந்த வருடம் மலையாளத்தில் தி கேரளா ஸ்டோரி என்கிற படம் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பாவி ஹிந்து பெண்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றி வெளிநாட்டில் உள்ள ஐஎஸ்ஐ பயங்கரவாதிகள் குழுவிற்கு அனுப்பி வைக்கும் கும்பலை பற்றிய ஒரு கதையாக உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகி இருந்தது.
மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூலையும் ஈட்டியது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தற்போது அதற்கான கதை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் படத்தின் இயக்குனர் சுதீப்தோ சென்.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் கேரளாவில் வெளியாகி மலையாள திரையுலகையே ஒரு உலுக்கு உலுக்கிய நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கையில் சொல்லப்பட்ட விஷயங்களை மையப்படுத்தி உருவாகிறது என சோசியல் மீடியாவில் ஒரு தகவல் பரவ ஆரம்பித்தது. இந்த படத்தின் இயக்குனர் சுதீப்தோ சென் இந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை என்றும் இந்த செய்தியை பார்த்துவிட்டு நானும் தயாரிப்பாளர் விபுல்ஷாவும் விழுந்து விழுந்து சிரித்தோம் என்று கூறியுள்ளார். அதே சமயம் இந்த இரண்டாம் பாகம் எந்த பின்னணியில் உருவாகிறது என்பதை பற்றி அவர் மூச்சுக் கூட விடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.