ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

கடந்த வருடம் மலையாளத்தில் தி கேரளா ஸ்டோரி என்கிற படம் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பாவி ஹிந்து பெண்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றி வெளிநாட்டில் உள்ள ஐஎஸ்ஐ பயங்கரவாதிகள் குழுவிற்கு அனுப்பி வைக்கும் கும்பலை பற்றிய ஒரு கதையாக உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகி இருந்தது.
மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூலையும் ஈட்டியது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தற்போது அதற்கான கதை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் படத்தின் இயக்குனர் சுதீப்தோ சென்.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் கேரளாவில் வெளியாகி மலையாள திரையுலகையே ஒரு உலுக்கு உலுக்கிய நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கையில் சொல்லப்பட்ட விஷயங்களை மையப்படுத்தி உருவாகிறது என சோசியல் மீடியாவில் ஒரு தகவல் பரவ ஆரம்பித்தது. இந்த படத்தின் இயக்குனர் சுதீப்தோ சென் இந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை என்றும் இந்த செய்தியை பார்த்துவிட்டு நானும் தயாரிப்பாளர் விபுல்ஷாவும் விழுந்து விழுந்து சிரித்தோம் என்று கூறியுள்ளார். அதே சமயம் இந்த இரண்டாம் பாகம் எந்த பின்னணியில் உருவாகிறது என்பதை பற்றி அவர் மூச்சுக் கூட விடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.




