ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளா அரசு வெளியிட்ட நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை, மலையாள திரை உலகில் கடந்த பல வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் பாலியல் அத்துமீறல்கள் மற்றும் அதிகார மையமாக சேர்ந்து பிறரை வளர விடாமல் தடுப்பது உள்ளிட்ட பல பிரச்னைகளை வெளிக்கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்து நடிகைகள் பலரும் பல பிரபல நடிகர்கள், இயக்குனர்களுடன் தாங்கள் சில வருடங்களுக்கு முன்பு எதிர்கொண்ட பாலியல் அத்துமீறல்கள் குறித்து காவல்துறையில் புகார் அளிக்க தொடங்கினர். அந்த வகையில் பிரபல குணச்சித்திர நடிகர்களான முகேஷ், சித்திக் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அந்த வகையில் நடிகர் முகேஷ் முன்ஜாமின் பெற்றிருந்த நிலையில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பினார்.
ஆனால் நடிகர் சித்திக்கின் ஜாமின் மனு கேரள உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்படும் சூழல் உருவானது. இதனை அறிந்த சித்திக் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தற்போது தலைமறைவாகி உள்ளார். போலீசார் அவர்மீது லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டு, அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்னொரு பக்கம் உச்சநீதிமன்ற மூலமாக அவருக்கு ஜாமின் பெறுவதற்கான வேலைகளும் துவங்கியுள்ளன. அதன் முடிவை தொடர்ந்து சித்திக் வெளியே வருவார் என சொல்லப்படுகிறது. அதற்குள் போலீசார் அவரை கைது செய்வார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்.