நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

பிரபல சீனியர் மலையாள குணச்சித்திர நடிகரான சித்திக் மீது மலையாள திரை உலகை சேர்ந்த நடிகை ஒருவர் கடந்த 2016ல் அவர் தன்னிடம் ஒரு ஹோட்டலில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்று கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரம் மியூசியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான பின்பு அது கொடுத்த துணிச்சலில் தான் இத்தனை வருடங்கள் கழித்து அவர் புகார் கொடுக்க முன் வந்ததாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சித்திக் விண்ணப்பித்த முன் ஜாமின் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க தலைமுறைவான சித்திக் உச்ச நீதிமன்றத்தின் மூலமாக தன்னை கைது செய்வதற்கு இடைக்கால தடை பெற்றார்.
அதேசமயம் போலீசாரின் விசாரணைக்கும் அவர் சென்று வந்தார். ஆனால் தங்களிடம் அவர் சரியானபடி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறி அவரது முன் ஜாமீன் மனு மீதான இடைக்கால தடையை ரத்து செய்ய வேண்டும் என கேரள அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம் அவருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்வதற்கு பதிலாக இன்னும் கால அவகாசம் கொடுத்து அவரது இடைக்கால ஜாமினை நீட்டிப்பு செய்துள்ளது. இது கேரள போலீசார் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.