ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

இந்திய அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் 700க்கும் அதிகமான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தவர் அர்ஜித் சிங். ஹிந்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் சுமார் 28 பாடல்களை கம்போஸ் செய்துள்ளார். தமிழிலும் சுமார் நான்கு பாடல்களை பாடியுள்ளார். இரண்டு முறை தேசிய விருது மற்றும் இந்தியாவின் பெருமைக்குரிய பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். கடந்த மாதத்தில் திடீரென அர்ஜித் சிங் தான் பாடகராக ஓய்வு பெறுவதை அறிவித்தார். இந்த நிலையில் அர்ஜித் சிங் தற்போது அவர் மேற்கு வங்காளத்தில் உள்ள ஜியாங் என்கிற தனது சொந்த ஊரில் 'ஹேசல்' என்கிற பெயரில் ஹோட்டல் தொடங்கி ரூ. 40க்கு மதிய சாப்பாடு வழங்கி வருகிறாராம். இது அங்குள்ள மக்களை குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.