ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் |
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடா என்பவருக்கு தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி டார்ச்சர் கொடுத்தார் என அவரை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் அங்கே முறைகேடாக பல வசதிகளை பெற்றதாக தெரியவந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தற்போது தர்ஷன் தொடர்ந்து முதுகு வலியால் அவதிப்பட்டு வருவதாகவும் அவருக்கு பெங்களூரில் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் அதற்கு அனுமதி அளித்தது. அதேசமயம் பெங்களூருக்கு அல்லாமல் பெல்லாரியிலேயே உள்ள விஜயநகர இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட தர்ஷனுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தர்ஷன் மீண்டும் பெல்லாரி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது குறித்த ஒன்றிரண்டு வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளன. இருப்பினும் தர்ஷனுக்கு அறுவை சிகிச்சை ஒன்றை உடனடியாக செய்தாக வேண்டும் என்றும் அதனால் அவரை பெங்களூரு மருத்துவமனையில் சேர்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் மீண்டும் நீதிமன்றத்தில் அவரது தரப்பிலிருந்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.