ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

பிரபல சீனியர் மலையாள குணச்சித்திர நடிகரான சித்திக் மீது மலையாள திரை உலகை சேர்ந்த நடிகை ஒருவர் கடந்த 2016ல் அவர் தன்னிடம் ஒரு ஹோட்டலில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்று கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரம் மியூசியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான பின்பு அது கொடுத்த துணிச்சலில் தான் இத்தனை வருடங்கள் கழித்து அவர் புகார் கொடுக்க முன் வந்ததாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சித்திக் விண்ணப்பித்த முன் ஜாமின் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க தலைமுறைவான சித்திக் உச்ச நீதிமன்றத்தின் மூலமாக தன்னை கைது செய்வதற்கு இடைக்கால தடை பெற்றார்.
அதேசமயம் போலீசாரின் விசாரணைக்கும் அவர் சென்று வந்தார். ஆனால் தங்களிடம் அவர் சரியானபடி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறி அவரது முன் ஜாமீன் மனு மீதான இடைக்கால தடையை ரத்து செய்ய வேண்டும் என கேரள அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம் அவருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்வதற்கு பதிலாக இன்னும் கால அவகாசம் கொடுத்து அவரது இடைக்கால ஜாமினை நீட்டிப்பு செய்துள்ளது. இது கேரள போலீசார் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.