வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவான படம் 'தாய் கிழவி'.
அறிமுக இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், ராதிகா சரத்குமார், சிங்கம் புலி, அருள்தாஸ் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை பிப்ரவரி 20ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், நேற்று திடீரென படத்தை ஒரு வாரம் தள்ளி வைத்து பிப்ரவரி 27ம் தேதி வெளியாகும் என்று புதிய அறிவிப்பை வெளியிட்டார்கள்.
படத்திற்கான புரமோஷன்களில் படக்குழு தீவிரமாக இருந்த நிலையில் இந்த திடீர் ஒத்தி வைப்பிற்கான காரணம் குறித்து விசாரித்தோம். படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுவதாக ஒப்பந்தம் போட்டு வாங்கிய வினியோகஸ்தர் ஒருவர், அட்வான்ஸ் தொகையை மட்டுமே கொடுத்துள்ளாராம். நேற்று வரையில் மீதித் தொகையைத் தரவேயில்லையாம்.
படத்தை வேறு ஒரு முன்னணி நிறுவனத்திற்குக் கொடுத்துவிடலாம் என சிவகார்த்திகேயன் ஆலோசனை சொல்லியிருக்கிறார். ஆனால், தயாரிப்பாளர்களுக்குள் இது குறித்து கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. மீதித் தொகை வராமல் படத்தை எப்படி வெளியிடுவது என ஒரு வாரம் தள்ளி வைக்கலாம் என முடிவு செய்தார்களாம்.
இப்போதெல்லாம் அறிவித்த தேதியில் படங்களை வெளியிடாமல் மாற்றி மாற்றி வெளியிடுவது வழக்கமாகப் போய்விட்டது.




