பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ‛தி கேரள ஸ்டோரி' என்கிற படம் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தை திரையிடுவதற்கு கேரளா, தமிழகம், மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது. பல இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் இந்த படம் திரையிடப்பட்டது. பல மாநிலங்களில் இந்த படத்திற்கு வரிவிலக்கும் அளிக்கப்பட்டது. அப்பாவி ஹிந்து பெண்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றி வெளிநாட்டில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகள் குழுவிற்கு அனுப்பி வைக்கும் கும்பலை பற்றிய ஒரு கதையாக உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகி இருந்தது.
இத்தகைய சர்ச்சையை, பரபரப்பை கிளப்பிய படத்தை சுதிப்தோ சென் என்பவர் இயக்கி இருந்தார். கதாநாயகியாக அதா சர்மா நடித்திருந்தார். இந்த படம் வெளியானதில் இருந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக பல இடங்களுக்கு பயணப்பட்டு வந்தார் சுதிப்தோ சென். அந்த வகையில் சமீபத்தில் ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும் தனது உடல்நிலை குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக சுதிப்தோ சென் கூறும்போது, “எனக்கு நீரிழப்பு மற்றும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளேன். இன்று மாலைக்குள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிடலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனால் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை” என்று கூறியுள்ளார்.




