''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
புனிதமான கோயில்களுக்குள் இன்றைய இளைஞர்கள், இளம் பெண்கள் பாரம்பரிய உடைகளை தவிர்த்து மேற்கத்திய உடைகளை அணிந்து வருவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கோயில்களுக்குள் மேற்கத்திய உடைகள் அணிந்து வர தடை செய்து கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
கோயிலுக்குள் இளம் பெண்கள் கவர்ச்சியான உடை அணிந்து நிற்கும் படத்தை வெளியிட்டு அவர் பதிவிட்டிருப்பதாவது: நான் ஒருமுறை வாடிகனுக்கு ஷார்ட்ஸ் டி-சர்ட் அணிந்து சென்றேன். என்னை வளாகத்துக்குள்கூட அனுமதிக்கவில்லை. நான் மீண்டும் ஒட்டலுக்கு சென்று உடைகளை மாற்ற வேண்டி இருந்தது. ஆனால் ஆங்கிலேயர்களின் உடைகளை அணிந்து இன்று சர்வசாதரணமாக கோயிலுக்கு செல்கிறார்கள். கோயில்களுக்குள் இரவு உடைகளை அணியும் இந்த கோமாளிகள், சோம்பேறிகள், கோயிலுக்குள் மேற்கத்திய உடை அணிந்து வரும் இதுபோன்ற முட்டாள்களுக்கு எதிராக கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.