காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
புனிதமான கோயில்களுக்குள் இன்றைய இளைஞர்கள், இளம் பெண்கள் பாரம்பரிய உடைகளை தவிர்த்து மேற்கத்திய உடைகளை அணிந்து வருவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கோயில்களுக்குள் மேற்கத்திய உடைகள் அணிந்து வர தடை செய்து கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
கோயிலுக்குள் இளம் பெண்கள் கவர்ச்சியான உடை அணிந்து நிற்கும் படத்தை வெளியிட்டு அவர் பதிவிட்டிருப்பதாவது: நான் ஒருமுறை வாடிகனுக்கு ஷார்ட்ஸ் டி-சர்ட் அணிந்து சென்றேன். என்னை வளாகத்துக்குள்கூட அனுமதிக்கவில்லை. நான் மீண்டும் ஒட்டலுக்கு சென்று உடைகளை மாற்ற வேண்டி இருந்தது. ஆனால் ஆங்கிலேயர்களின் உடைகளை அணிந்து இன்று சர்வசாதரணமாக கோயிலுக்கு செல்கிறார்கள். கோயில்களுக்குள் இரவு உடைகளை அணியும் இந்த கோமாளிகள், சோம்பேறிகள், கோயிலுக்குள் மேற்கத்திய உடை அணிந்து வரும் இதுபோன்ற முட்டாள்களுக்கு எதிராக கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.