விஷால் பாணியில் நடிகர் யஷ் ; 'டாக்ஸிக்' படப்பிடிப்பில் திடீர் திருப்பம் ? | கமல் மிஸ் பண்ணிய '20-20' பாடல் ; நடிகர் திலீப் புது தகவல் | ஸ்ரீலங்காவில் நடைபெறும் ராம்சரணின் 'பெத்தி' படப்பிடிப்பு | ஆங்கிலத்தில் டப்பிங் ஆகி வெளியாகும் முதல் படம் 'காந்தாரா சாப்டர் 1' | அப்பாவை இழந்தது அப்படிதான், தம் அடிக்கிற சீனில் நடிக்கமாட்டேன் : பூவையார் | 30 வயதில் திருமணம் செய்ய நினைத்தேன் : தமன்னா பேசியது ஏன் | சினிமாவிலும் 8 மணி நேர வேலை: ராஷ்மிகா வலியுறுத்தல் | கமல் படம் தான் ரஜினியின் கடைசி படமா... : உண்மை நிலவரம் என்ன? | 'பாகுபலி'க்கு வழிவிடுகிறாராம் விஷ்ணு விஷால்: 'ஆர்யன்' தெலுங்கு ரிலீஸ் தள்ளிவைப்பு | நவம்பர் 7ம் தேதி வெளியாகும் 'பிரிடேட்டர்' படத்தின் புதிய பாகம்: தமிழிலும் பார்க்கலாம் |

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் அவரது 12வது படம் தற்போது தயாராகி வருகிறது. ஒரு ஸ்பை திரில்லராக உருவாகும் இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா முதன் முறையாக ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜெர்சி படத்தை இயக்கிய இயக்குனர் கவுதம் தின்னனூரி இயக்குகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கை சென்றனர். இலங்கையில் இறங்கி தான் தங்க வேண்டிய ஹோட்டலுக்குச் சென்ற விஜய் தேவரகொண்டாவுக்கு அங்கு இலங்கையின் பாரம்பரிய கண்டியன் இசைக்குழுவினரின் நடனத்துடன் கூடிய சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கையில் கிட்டத்தட்ட மூன்று முதல் நான்கு வாரங்கள் வரை படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.