'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்: பசில் ஜோசப் உறுதி | கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… |
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் அவரது 12வது படம் தற்போது தயாராகி வருகிறது. ஒரு ஸ்பை திரில்லராக உருவாகும் இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா முதன் முறையாக ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜெர்சி படத்தை இயக்கிய இயக்குனர் கவுதம் தின்னனூரி இயக்குகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கை சென்றனர். இலங்கையில் இறங்கி தான் தங்க வேண்டிய ஹோட்டலுக்குச் சென்ற விஜய் தேவரகொண்டாவுக்கு அங்கு இலங்கையின் பாரம்பரிய கண்டியன் இசைக்குழுவினரின் நடனத்துடன் கூடிய சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கையில் கிட்டத்தட்ட மூன்று முதல் நான்கு வாரங்கள் வரை படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.