நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் | மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! |
சமீபத்தில் நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாண் தனது ஜனசேனா கட்சி மூலமாக தான் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் வெற்றியை பெற்றுள்ளார். முதன்முறையாக அவர் ருசிக்கும் மாபெரும் வெற்றி இது என்பதால் அவருக்கு தெலுங்கு திரையுலகில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில் டில்லி சென்ற பவன் கல்யாண் தன்னுடன் தனது இரண்டாவது மனைவி ரேணு தேசாயின் மகன் அகிரா நந்தனையும் உடன் அழைத்துச் சென்றிருந்தார். பிரதமராக இருக்கும் நரேந்திர மோடிக்கு பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் பவன் கல்யாண்.
தானும் தந்தையும் பிரதமர் மோடியுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது தாய்க்கு அனுப்பி வைத்த அகிரா நந்தன், பிரதமரை சந்தித்த அந்த கணம் குறித்து சிலாகித்து விவரித்துள்ளார். ஏற்கனவே பாஜகவில் இருக்கும் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி ரேணு தேசாய் தனது மகன் பிரதமரின் அருகில் நிற்பதைக் கண்டு பூரிப்பில் மகிழ்ச்சி அடைந்ததாகவும் அதே சமயம் ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டதாகவும் கூறியுள்ளார்.