கோவை தமிழ் பிடிக்கும்னு கிர்த்தி ஷெட்டி சொன்னது ஏன்? | ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! |

தமிழில் 'நெஞ்சிருக்கும் வரை, உன்னைப் போல் ஒருவன், பயணம், என் வழி தனி வழி, அச்சாரம்” உள்ளிட்ட படங்களிலும் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்தவர் பூனம் கவுர். அவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பிருந்தே தெலுங்கின் முன்னணி இயக்குனரான திரிவிக்ரம் சீனிவாஸ் மீது அவ்வப்போது குற்றம் சாட்டி வந்தார். அது மட்டுமல்லாது தற்போது ஆந்திர துணை முதல்வராக இருக்கும் பவன் கல்யாண் மீதும் குற்றம் சுமத்தி சில பேட்டிகளையும் கொடுத்திருந்தார். இவை ஓரிரு வருடங்களுக்கு முன்பு தெலுங்குத் திரையுலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தெலுங்கில் தற்போது நடன இயக்குனர் ஜானி மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சமயத்தில் பூனம் கவுர் அவரது எக்ஸ் தளத்தில், “திரிவிக்ரம் சீனிவாஸ் மீதான எனது புகாரை தெலுங்கு நடிகர் சங்கத்தினர் தீவிரமாக எடுத்துக் கொண்டிருந்தால் நானும் மற்றும் பலரும் அரசியல் துன்புறுத்தலை சந்தித்திருக்க மாட்டோம். நான் அமைதியாகப் புறக்கணிக்கப்பட்டேன். நான் இதைத் தலைவர்களிடமும் தெரிவித்திருந்தேன், ஆனால், எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. திரையுலகத்தில் உள்ள பெரியவர்கள் இயக்குனர் த்ரிவிக்ரமிடம் கேள்வி கேட்குமாறு இப்போது கேட்டுக் கொள்கிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.
அதோடு, ஜானி விவகாரம் குறித்து, “குற்றவாளி ஷேக் ஜானியை இனிமேல் மாஸ்டர் என்று அழைக்கக் கூடாது. 'மாஸ்டர்' என்ற வார்த்தைக்குக் கொஞ்சம் மரியாதை கொடுங்கள்,” என்றும் மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.