ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
'எமர்ஜென்சி' படம் தொடர்பாக பாலிவுட் நடிகையும், பா.ஜ., எம்.பி.யு.மான கங்கனா ரணாவத்துக்கு சண்டிகர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாலிவுட் நடிகை கங்கனா ‛எமர்ஜென்சி' என்ற படத்தை இயக்கி, நடித்து, தயாரித்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கையை தழுவி, அவரது காலத்தில் கொண்டு வரப்பட்ட அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. செப்., 6ல் படம் ரிலீஸ் என அறிவித்திருந்தனர். ஆனால் தணிக்கையில் சிக்கல், சீக்கிய அமைப்புகளின் மிரட்டல் போன்றவற்றால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது.
இந்நிலையில் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் வக்கீல் ரவீந்தர் சிங் பாசி என்பவர் படத்தில் சீக்கியர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயன்றதாக கூறி மனு தாக்கல் செய்தார். 'சீக்கியர் சமூகத்திற்கு எதிரான பல பொய்யான குற்றச்சாட்டுகள் படத்தில் இடம் பெற்றுள்ளன எனக் கூறி கங்கனா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார். இதையடுத்து, கங்கனாவிற்கு சண்டிகர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை டிசம்பர் 5ல் மீண்டும் வருகிறது.