ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் |

கடந்தாண்டு நவம்பர் மாதம் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு இருவரும் 29 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு பிரிந்து வாழப்போவதாக அறிவித்தார்கள். இந்த செய்தி ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. அவர்களை சேர்ந்து வாழுமாறு கோரிக்கை வைத்தார்கள்.
இந்நிலையில் தற்போது சாய்ரா பானு தனது வழக்கறிஞர் வந்தனா ஷா என்பவர் மூலமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், சமீபத்தில் தனக்கு அமெரிக்க மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் தனக்கு ஆதரவாக இருந்ததை தெரிவித்து அவருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் சாய்ரா பானு. அவர் மட்டுமின்றி, ஆஸ்கர் விருது பெற்ற ஒளி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, அவரது மனைவி ஷாதியா மற்றும் தனது சட்ட ஆலோசகர் வந்தனா ஷா ஆகியோரும், தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலகட்டத்தில் தனக்கு ஆதரவாக இருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் சாய்ரா பானு.