வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் | யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது | அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ‛வலை' | 2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல் | ‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ன மாதிரியான படம் | காவல் நிலையத்தில் நடக்கும் கதை | 'லெகசி' வெப் தொடரில் கேங்ஸ்டர் ஆக மாதவன் |

நடிகை சமந்தா சமீப காலமாக ஆன்மீக விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார். தியானம் மற்றும் மாற்று சிகிச்சைகளையும் அவர் பின்பற்றுகிறார். நீண்ட காலமாகவே ஈஷா அறக்கட்டளையின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஈஷா யோகா மையத்துக்கு சென்ற சமந்தா, அங்கு மூன்று நாட்கள் மவுன விரதம் கடைபிடித்துள்ளார். அதாவது, தொலைபேசியில் இருந்து விலகி இருப்பது, யாரிடத்திலும் பேசாமல் தனிமையாக இருப்பது என்று மூன்று நாட்களை தான் கடை பிடித்ததாக இணையப்பக்கத்தில் தெரிவித்திருக்கும் சமந்தா, இது ஒரு பயங்கரமான அனுபவம் என்றும் குறிப்பிட்டுள்ளார். என்றாலும் இது போன்ற மவுன விரதத்தை மீண்டும் நான் முயற்சிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




