குட் பேட் அக்லி : ஓஜி சம்பவம் பாடல் வெளியானது | ஜனநாயகன் படம் குறித்து மமிதா பைஜூ கொடுத்த அப்டேட் | இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்தை ஹீரோவாக்கும் பிரபுதேவா | ஏஸ் படத்தின் உருகுது உருகுது... முதல் பாடல் வெளியானது | சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் |
தமிழில், நிமிர்ந்து நில், என்னை அறிந்தால், உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்த பார்வதி நாயர், அண்மையில் வெளியான கோட் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சென்னையில் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு தனது வீட்டில் விலை மதிப்புள்ள லேப்டாப், செல்போன், 2 கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருந்தார். மேலும் இந்த பொருட்களை தனது வீட்டில் இரண்டு வருடமாக பணிபுரிந்து வந்த சுபாஷ் என்ற நபர் திருடிச் சென்றதாக குறிப்பிட்டிருந்தார். இதனடிப்படையில் அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே சுபாஷும், தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் பார்வதி நாயர் உள்ளிட்ட 7 பேர் மீது புகார் அளித்திருந்தார். அதில், தன்னை தாக்கி கொடுமைப்படுத்தியதாக கூறியிருந்தார். ஆனால், புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்தார்.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி, பார்வதி நாயர், அவரது உதவியாளரும் அயலான் திரைப்பட தயாரிப்பாளருமான கொடப்பாடி ராஜேஷ் உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.