Advertisement

சிறப்புச்செய்திகள்

கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : விமர்சனம் மீது தொடரப்பட்ட முதல் வழக்கு

09 செப், 2025 - 11:43 IST
எழுத்தின் அளவு:
Flashback-The-first-case-filed-over-criticism
Advertisement

இன்றைக்கு திரைப்பட விமர்சனங்களின் போக்கு மாறி விட்டது. பணம் பெற்றுக் கொண்டு செய்யப்படும் விமர்சனங்களை 'புரமோசன்' என்கிறார்கள். ஒரு காலத்தில் பத்திரிகைகளில் நேர்மையான விமர்சனங்கள் வந்தபோதும் அதையும் எதிர்த்து சில வழக்குகள் தொடரப்பட்டது. அப்படி தொடரப்பட்ட முதல் வழக்கு சிவாஜி நடித்த 'அன்பு' படத்தை பற்றி அன்றைய முன்னணி வார இதழ் எழுதிய விமர்சனத்தின் மீது.

1953ம் ஆண்டு வெளியான இந்த படத்தை எம்.நடேசன் என்பவர் இயக்கி, தயாரித்தார். சிவாஜியுடன் டி.ஆர்.ராஜகுமாரி, பத்மினி, டி.எஸ்.பாலய்யா, லலிதா, கே.தங்கவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். டி.ஆர்.பாப்பா இசை அமைத்திருந்தார்.

படத்தின் நாயகி டி.ஆர்.ராஜகுமாரி ஒரு வயதான முதியவரை திருமணம் செய்து கொள்கிறார். அந்த முதியவரின் மகன் சிவாஜி. ராஜகுமாரி அந்த முதியவரோடு வாழ்ந்த வாழ்க்கையில் கர்ப்பமாகிறார். இந்த நிலையில் முதியவர் இறந்து விடுகிறார். சிவாஜி, பத்மினியை திருமணம் செய்கிறார். ஆனால் சிலர் ராஜகுமாரியின் வயிற்றில் வளர்வது சிவாஜியின் குழந்தை என்று வதந்தியை பரப்புகிறார்கள். இதை நம்பும் பத்மினி, ராஜகுமாரியை கொடுமைப்படுத்த தொடங்குகிறார். இதற்கு என்ன தீர்வு என்பதுதான் படத்தின் கதை.

முதலில் சில தியேட்டர்களில் மட்டும் வெளியிடப்பட்ட இந்த படம் பின்னர் மற்ற ஊர் தியேட்டர்களில் வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தது. குறிப்பிட்ட அந்த பிரபல வாரப் பத்திரிகை படத்தில் வரும் ஒவ்வொரு கேரக்டரும் தங்களை தாங்களே விமர்சிப்பது போன்று விமர்சனம் வெளியிட்டது. இந்த விமர்சனம் படத்தின் வசூலை கடுமையாக பாதித்தது. அதோடு படத்தை அவதூறு செய்கிறது என்று தயாரிப்பாளர் நடேசன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் நீதி மன்றத்தின் வழிகாட்டுதல்படி நீதிமன்றத்திற்கு வெளியே இந்த பிரச்னை பேசி தீர்க்கப்பட்டது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக்: ஒரே தீபாவளியில் வெற்றி, தோல்வியை சந்தித்த சிவகுமார்பிளாஷ்பேக்: ஒரே தீபாவளியில் வெற்றி, ... 8 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் லாவண்யா 8 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in