பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

மாருதி இயக்கத்தில் பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் 'தி ராஜா சாப்'. இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 2022 முதல் ஆரம்பமாகி கடந்த மூன்று வருடங்களாக மிகவும் தாமதமாக நடந்து வருகிறது. 2026 ஜனவரி படத்தை வெளியிட உள்ளார்கள்.
இப்படத்தை பியூப்பிள் மீடியா பேக்டரி, ஐவி என்டர்டெயின்மென்ட் ஆகியவை இணைந்து தயாரித்து வருகின்றன. இந்நிலையில் இப்படத்தை எதிர்த்து டில்லி உயர்நீதி மன்றத்தில் ஐவி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
ஒப்பந்தக் கடமைகளை கடுமையாக மீறியதாகவும், நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளார்கள்.
இந்தப் படத்திற்காக ஐவி என்டர்டெயின்மென்ட் 218 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாம். அந்தத் தொகையை 18 சதவீத வட்டியுடன் திருப்பி கேட்கிறார்கள். ஒப்பந்தத்தை மீறியதோடு, பணத்தைத் திருப்பித் தர பியூப்பிள் மீடியா நிறுவனம் மறுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
இதையடுத்து படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.