பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் | ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு | அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் |

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். கடந்த சில வருடங்களாக இவர் ஹிந்தி படத்திலும் நடிப்பதற்கான முயற்சியில் உள்ளார். இதற்காக தான் சூர்யா, ஜோதிகா இருவரும் மும்பையில் வீடு வாங்கி செட்டில் ஆகியுள்ளனர் என்கிறார்கள்.
கடந்த 2024ம் ஆண்டில் ஹிந்தி இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்கத்தில் மகாபாரதத்தை தழுவி 'கர்ணா' என்கிற படத்தை இயக்க உள்ளதாகவும், இதில் கதாநாயகனாக சூர்யா மற்றும் கதாநாயகியாக ஜான்வி கபூர் என இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால், ஒரு சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டது.
இப்போது ராகேஷ் ஓம் பிரகாஷ் அளித்த பேட்டியில் முதல்முறையாக கர்ணா படம் குறித்து அவர் கூறியதாவது, "கர்ணா படத்திற்காக ஆறு வருடங்கள் முன் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளேன். இரண்டு பாகங்களாக உருவாக்க திட்டமிட்டுள்ளேன். திரைக்கதை எழுதும் பணிகள் முழுவதும் நிறைவு பெற்றது. கிட்டத்தட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருந்த தருவாயில் ஒரு சில காரணங்களால் இந்த படத்தை தள்ளிவைக்கும் சூழ்நிலை ஏற்பட்டது, ஆனால் கைவிடவில்லை. இந்த படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கனவே ஆறு பாடல்களை இசையமைத்து வைத்துள்ளார்." இவ்வாறு தெரிவித்துள்ளார்.