ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் அதிக பட்ஜெட் காரணத்தால் இதன் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடித்து தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தை இயக்கியுள்ள சிவகுமார் முருகேசன் என்பவரின் கதையை கேட்டு சிவகார்த்திகேயன் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளனர் என்கிறார்கள். ஏற்கனவே கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் 'அமரன்' படம் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் வருகின்ற நாட்களில் இந்த படம் குறித்து கூடுதல் தகவல் கிடைக்கும் என்கிறார்கள்.