‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

மலையாள நடிகர் ஜெயசூர்யா தமிழில் என் மன வானில், வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் தற்போது பிரம்மாண்ட வரலாற்றுப் படமாக உருவாகி வரும் 'கத்தனார்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2023ல் சுவாதிக் ரஹீம் என்பவர் துவங்கிய சேவ் பாக்ஸ் என்கிற நிறுவனத்திற்கு விளம்பர தூதராக ஒப்பந்தமானார் ஜெயசூர்யா. அந்த நிறுவனம் தனது முதலீட்டாளர்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி கோடிக்கணக்கில் பணத்தை ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுவாதி ரஹீம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த செயலியின் விளம்பர தூதராக ஜெயசூர்யா இருந்ததால் அவரையும் அமலாக்கத்துறை அவ்வப்போது அழைத்து விசாரணை நடத்தி வந்தது. அந்த வகையில் கடந்த திங்கள்கிழமையும் அமலாக்கத்துறை முன்பு தனது மனைவியுடன் விசாரணைக்கு ஆஜர் ஆனார் ஜெயசூர்யா. நடிகர் ஜெயசூர்யாவுக்கு இந்த சேவ் பாக்ஸ் செயலி நிறுவனத்தின் உள்நோக்கம் மற்றும் அதன் நடைமுறைகள் நிஜமாகவே தெரிந்திருந்ததா, இல்லை அவர் அதை அறியவில்லையா என்பது குறித்து எல்லாம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
மேலும் அவரிடம் சேவ் பாக்ஸ் நிறுவனத்திடம் இருந்து அவரது வங்கி கணக்கு நடைபெற்ற பண பரிமாற்றங்கள் குறித்த தகவல்கள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் கிட்டத்தட்ட 39 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜெயசூர்யாவின் சொத்துக்களை அமலாக்கத்துறை தற்போது முடக்கி வைத்துள்ளது.