சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
மலையாள நடிகையான சம்யுக்தா மேனன் தமிழில் வாத்தி படத்தில் நடித்தார். தொடர்ந்து தெலுங்கிலும் நடிக்கிறார். மலையாள சினிமாவில் சமீபத்தில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானது. இதைத்தொடர்ந்து மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றி வெளிப்படையாக பல திரைப்பிரபலங்களும் பேசி வருகின்றனர். இதில் சில முன்னணி நடிகர்களின் பெயர்களும் உள்ளன. அவர்கள் மீது வழக்கும் பதிவாகி உள்ளது.
ஹேமா கமிட்டி போன்று மற்ற திரையுலகிலும் இதுபோன்று கமிட்டி அமைக்க வேண்டும் என்ற குரல்கள் எழ துவங்கி உள்ளன. இந்நிலையில் ஹேமா கமிட்டி பற்றி சம்யுக்தா கூறுகையில், ‛‛காட்டில் மாட்டிக் கொண்டு வழிதேடும் விதமாக தான் இன்றைய சினிமா உள்ளது. இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி சிலர் சுரண்டல்களில் ஈடுபடுகின்றனர். சினிமா துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்க வேண்டும். அதற்கு ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமாவில் ஒரு கேம் சேஞ்சராக மாறும்'' என்கிறார்.