உண்மை எப்போதும் வெல்லும் : ஆர்த்தி பதிவு; குஷ்பு ஆதரவு | விஜய் அண்ணாவுக்கு நிறைய சவால்கள் இருக்கிறது : சவுந்தர்யா ரஜினி | என் மனைவியை காப்பாற்றுங்க : முதல்வர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை வேண்டுகோள் | விவாகரத்து வரை சினிமாவிற்கு முழுக்கு, என் குடும்பத்தை கெடுத்தவர் மூன்றெழுத்து நடிகை : ரவி மோகன் கண்ணீர் பேட்டி | 'ஜனநாயகன்' படத்தை கசிய விட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது | ஒன்றிணைந்து பேசுவோம் : திரையுலகினருக்கு கமல்ஹாசன் அழைப்பு | ரவி மோகனை பிரிந்தார் கெனிஷா : சென்னையை விட்டும் வெளியேறினார் | தேவர் மகன் வீட்டில் படமாக்கப்பட்ட மலையாளப் படம் 'தேவர்' | உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை | 30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா |

கன்னடத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான 'நான் ஈ' சுதீப் நடிக்க உள்ள அவரது 47வது படத்தை கடந்த வருடம் சுதீப் வெளிவந்து வெற்றி பெற்ற 'மேக்ஸ்' படத்தை இயக்கிய விஜய் கார்த்திகேயா இயக்க உள்ளார்.
இந்தப் படத்தை தமிழ் இயக்குனரான சேரன் முதலில் இயக்குவராக இருந்தது. தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இரண்டு வருடங்களுக்கு முன்பு சுதீப்பின் பிறந்தநாளில் வெளியானது.
சில காரணங்களால் சேரன் - சுதீப் கூட்டணி இணைந்து பணியாற்ற முடியவில்லை என்று சொல்கிறார்கள். அதனால், தான் விஜய் கார்த்திகேயவை அந்தப் படத்தை இயக்கும்படி ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
சுதீப் தற்போது 'பில்லா ரங்கா பாட்ஷா' என்ற கன்னடப் படத்தில் நடித்து வருகிறார். சேரன் வேறு ஒரு படத்தை இயக்கும் வேலைகளில் உள்ளாராம்.